விஷாலை முக்கிய கதாபாத்திரமாகக் கொண்டு ‘வீரமே வாகை சூடும்’ என்ற திரைப்படத்தை இயக்கியவர் தூ.பா. சரவணன். அந்த படம் கலவையான விமர்சனங்களை பெற்றது.

இந்நிலையில் நீண்ட இடைவெளிக்குப் பிறகு, தற்போது அவர் நடிகர் ஆதியை வைத்து ஒரு புதிய படத்தை இயக்கி வருகின்றார். இந்த படம் தமிழ் மற்றும் தெலுங்கு ஆகிய இரு மொழிகளிலும் உருவாகி வருகிறது. இப்படத்தின் தலைப்பு ‘டிஸ்கோ’ என தகவல்கள் வெளியாகியுள்ளன.
இந்த நிலையில், இந்தப் படத்தில் மிக முக்கியமான ஒரு பாத்திரத்தில் இயக்குனர் மிஷ்கின் நடிக்க உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. ‘மாவீரன்’ திரைப்படத்தை தொடர்ந்து, அவர் இந்த படத்தில் நடிக்க கமிட்டானதாக கூறப்படுகிறது. மேலும், இப்படத்தில் வில்லன் கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.