சினிமாவில் பன்முக திறமை கொண்ட இயக்குனர் பார்த்திபன் பல திரைப்படங்களை இயக்கியும் வித்தியாசமான நடிகராகவும் இருக்கிறார். இயக்குனராக அவதாரம் எடுத்த சமயத்தில் ஏ.வி.எம் நிறுவனத்துடன் படம் பண்ண ஒப்பந்தமானது.
தனது படத்திற்கு இளையராஜா தான் இசையமைக்க இருந்தது. ஆனால் அந்த நிறுவனத்துக்கும் இளையராஜாவுக்கும் கருத்து வேறுபாடு இருந்ததால் அவருக்கு ’நோ’ சொல்லி விட்டார்கள். அவர் இசை இல்லாத படத்தை எடுக்க விரும்பவில்லை. அதனால் வாங்கிய அட்வான்ஸை திரும்ப கொடுத்திருக்கிறேன் என தனது சினிமா அனுபவத்தை டூரிங் டாக்கீஸ் சேனலில் பகிர்ந்து கொண்டார் பார்த்திபன்.