Thursday, April 11, 2024

“தென்னிந்திய-பாலிவுட் நடிகர்கள் இணைந்து நடித்தால் 4,000 கோடியை அள்ளலாம்” – சல்மான்கானின் நம்பிக்கை

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

தென்னிந்திய மற்றும் பாலிவுட் நடிகர்கள் ணைந்து நடித்தால் 4,000 கோடிவரை வசூலிக்கலாம் என பாலிவுட் சூப்பர் ஸ்டார் நடிகரான சல்மான்கான் தெரிவித்துள்ளார்.

பிரித்விராஜ் இயக்கத்தில் மோகன்லால் நடிப்பில் மலையாளத்தில் வெளியான படம் ‘லூசிஃபர்’ படம் தெலுங்கில் ‘காட்ஃபாதர்’ என்ற பெயரில் ரீமேக்காகியுள்ளது.

இதில் சிரஞ்சீவி நாயகனாக நடிக்க அவருடன் நயன்தாரா நடித்துள்ளார். இப்படத்தில் சல்மான்கானும் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். மோகன்ராஜா இயக்கியுள்ள இப்படத்திற்கு தமன் இசையமைத்துள்ளார்.

இன்றைக்கு அத்திரைப்படம் திரையரங்குகளில் வெளியாகிறது. இதையொட்டி மும்பையில் இந்தப் படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு நடைபெற்றது.

இந்த நிகழ்வில் நடிகர் சல்மான்கான் பேசும்போது, ”பெரும்பாலானோர் ஹாலிவுட்டில் நடிக்க ஆசைப்பட்டுக் கொண்டிருக்கும் வேளையில் நான் தென்னிந்திய படங்களில் நடிக்க ஆசைப்படுகிறேன். மக்கள் தென்னிந்திய படங்கள் வசூலிக்கும் 300, 400 கோடிகளைப் பற்றி பேசிக் கொண்டிருக்கிறார்கள்,

தென்னிந்திய சினிமா நடிகர்களும், பாலிவுட் நடிகர்களும் இணைந்து நடித்தால் பாக்ஸ் ஆபீஸில் படம் 3,000 முதல் 4,000 கோடி வசூலை எட்டும். அதன் மூலம் பரந்த பார்வையாளர்களிடம் படங்களை கொண்டுபோய் சேர்க்க முடியும்” என்றார்.

- Advertisement -

Read more

Local News