Friday, April 12, 2024

“தயாரிப்பாளர்கள் கொடுக்குற சம்பளத்தை வாங்கிக்கிறேன்..” – சிவகார்த்திகேயன் பேட்டி..!

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

லைகா நிறுவனத்தின் தயாரிப்பில் நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகியிருக்கும் டான்’ படம் நாளை மறுநாள் வெளியாகிறது.

இந்தப் படத்தில் சிவகார்த்திகேயனுடன் பிரியங்கா மோகன், எஸ்.ஜே.சூர்யா, சமுத்திரக்கனி, சூரி உள்பட பலர் நடித்திருக்கிறார்கள். அனிருத் இசையமைத்திருக்கிறார். அறிமுக இயக்குநர் சிபி சக்கரவர்த்தி இயக்கியுள்ளார்.

இதையொட்டி சிவகார்த்திகேயன் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் பேசும்போது,  

“இந்தப் படம் மாணவர்களின் பிரச்சனைகளையும், கனவுகளையும் பற்றிப் பேசுகிற படம். இதில் நான் கல்லூரி மாணவனாகவும், பள்ளி மாணவனாகவும் நடித்திருக்கிறேன். பள்ளி மாணவனாக நடிக்க 8 கிலோவரையிலும் எடையைக் குறைத்திருக்கிறேன்.

கல்லூரியில் என்னுடன் படிக்கும் மாணவர்கள் என்னை டான்’ என்று செல்லமாக அழைப்பார்கள். அதனால்தான் படத்திற்கு ‘டான்’ என்று டைட்டில் வைத்துள்ளோம். மற்றபடி இந்தப் படத்தில் நான் தாதாவாக நடிக்கவில்லை. படமும் தாதாக்கள் பற்றிய படமில்லை.

எனது முந்தைய இரண்டு படங்கள் 100 கோடிக்கும் மேல் வசூலித்தது. இதனால்தான் நான் சம்பளத்தை உயர்த்தி விட்டேன் என்கிறார்கள். சம்பளத்தை நான் உயர்த்தவில்லை. எனக்கு எவ்வளவு சம்பளம் தரவேண்டும் என்பதை தயாரிப்பாளர்கள்தான் முடிவு செய்கிறார்கள். அவர்கள் கொடுப்பதை நான் வாங்கிக் கொள்கிறேன்.

தற்போதைய காலக்கட்டத்தில் ஓடிடி தளம் என்பது தவிர்க்க முடியாதது. சிறிய பட்ஜெட் படங்களுக்கு அது மிகப் பெரிய தளம். ஆனால் ஓடிடி படங்களில் நடிக்கவோ, வெப் சீரிசில் நடிக்கவோ மாட்டேன். இப்போது எனது இலக்கு பெரிய திரைதான்.

பெரிய பட்ஜெட் படங்களை திட்டமிட்டு எடுத்தால் கண்டிப்பாக அது லாபம் தரும். பாடல் உரிமம், தொலைக்காட்சி உரிமம், ஓடிடி உரிமம் என சினிமா வியாபாரத்தின் தளம் விரிந்திருக்கிறது.

சினிமா இப்போது ஆரோக்கியமாகத்தான் இருக்கிறது. கொரோனா காலத்திற்குப் பிறகு தற்போது மக்கள் தியேட்டருக்கு அதிகமாக வருகிறார்கள். நல்ல படங்களுக்கு ஆதரவு தருகிறார்கள்.

ஒரு படம் எல்லா மொழி பேசும் மக்களால் விரும்பப்படும்போது அது உலகப் படம் ஆகிறது. இந்திய மக்களால் விரும்பப்படும்போது அது பான் இந்தியா படமாகிறது. என்னுடைய அடுத்த படமா அயலான்’ படம் பான் இந்திய படமாக இருக்கும்.

அடுத்து நான் கமல் ஸார் தயாரிப்பில் நடிக்கிறேன். அது எனக்கு மிகவும் பெருமையாக இருக்கிறது. ரஜினியுடன் நடிக்கப் போவதாக மற்றவர்கள்தான் சொல்கிறார்கள். ஆனால், அது குறித்து யாரும் இதுவரையிலும் என்னிடம் பேசவில்லை. ரஜினியுடன் நடிக்கும் வாய்ப்பு வந்தால் கட்டாயம் நடிப்பேன்…” என்றார் சிவகார்த்திகேயன்.

- Advertisement -

Read more

Local News