Touring Talkies
100% Cinema

Wednesday, May 14, 2025

Touring Talkies

20 ஆண்டுகளாக நான் நடிக்கும் படங்களுக்கு சம்பளம் பெறுவதில்லை… – நடிகர் அமீர்கான்!

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

பாலிவுட் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக உள்ளவர் அமீர் கான். இவர் ஒவ்வொரு கதையையும் கவனமாக தேர்வு செய்து, தரமான படங்களில் மட்டுமே நடித்து வருகிறார். பாலிவுட்டில் மிக அதிக வசூலை பெற்ற நடிகர்களில் முதலிடத்தில் இருப்பவர் இவரே. இவரது ‘டங்கல்’ படம் ரூ.2000 கோடி வசூலை கடந்து சாதனை படைத்தது.

அதற்குப் பிறகு, அவர் நடித்த படங்கள் அதிகம் வசூல் செய்யவில்லை. குறிப்பாக, அவர் மிகுந்த எதிர்பார்ப்பில் நடித்த ‘லால் சிங் சத்தா’ படம் எதிர்பார்த்த அளவிற்கு வெற்றிபெறாமல் போனது.

சமீபத்தில் அவர் அளித்த ஒரு பேட்டியில், “கடந்த 20 ஆண்டுகளாக நான் நடிக்கும் எந்த படத்திற்கும் சம்பளமாக தொகை பெறுவதில்லை. படம் திரைக்கு வந்து வெற்றி பெற்று லாபம் ஈட்டிய பிறகே, அதன் லாபத்தில் இருந்து பங்கு பெறுகிறேன். அதற்கு முன்பு, ஒரு ரூபாய் கூட முன்பணமாக வாங்குவதில்லை” என தெரிவித்துள்ளார்.

- Advertisement -

Read more

Local News