Touring Talkies
100% Cinema

Saturday, March 15, 2025

Touring Talkies

“ரஜினிக்கேற்ற கதை என்னிடம் உள்ளது…” – இயக்குநர் அல்போன்ஸ் புத்திரன் அறிவிப்பு..!

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

‘சூப்பர் ஸ்டார்’ ரஜினிக்கு ஏற்ற கதையை தயார் செய்து வைத்திருப்பதாகச் சொல்லியிருக்கிறார் மலையாள இயக்குநரான அல்போன்ஸ் புத்திரன்.

மலையாள மொழியில் ‘நேரம்’, ‘பிரேமம்’ ஆகிய சூப்பர் ஹிட் படங்களை இயக்கியவர் இயக்குநர் அல்போன்ஸ் புத்திரன். தற்போது ஐந்தாண்டு இடைவெளிக்குப் பிறகு புதிய படத்தை இயக்கவுள்ளார். இந்தப் படத்திற்கு பாட்டு’ என்று பெயர் வைத்துள்ளார் அல்போன்ஸ். இந்தப் புதிய படத்தில் பகத் பாஸில் நாயகனாக நடிக்கவுள்ளார்.

இந்த நிலையில் அல்போன்ஸ் புத்திரனின் பேஸ்புக் பக்கத்தில் ரசிகர் ஒருவர் “ரஜினியை வைத்துப் படம் இயக்குவதற்காகக் கதை வைத்துள்ளீர்களா..?” என்று கேள்வி எழுப்பியிருந்தார்.

இதற்கு இயக்குநர் அல்போன்ஸ் புத்திரன், ”ரஜினி சாருக்குக் கதை வைத்திருக்கிறேன். ‘பிரேமம்’ படத்துக்குப் பிறகு அவரைச் சந்திக்க முயற்சி செய்தேன். ஆனால், இதுவரை சந்திக்க இயலவில்லை. ரஜினி சாரை வைத்து நான் படம் எடுக்க வேண்டும் என்று என் தலையில் எழுதியிருந்தால் அது நடந்தே தீரும். நேரம் சரி ஆகட்டும். நாம் பாதி வேலை செய்துவிட்டால் மீதி வேலையைக் கடவுள் பார்த்துக்கொள்வார் என்று நம்பிக்கை உள்ளது. கடவுள் கரோனாவை அழிப்பதில் பிஸியாக இருக்கிறார் என்று நினைக்கிறேன். அதன்பிறகு திரும்பவும் முயற்சி செய்வேன்” என்று தெரிவித்துள்ளார்.

இது ரஜினி ரசிகர்களை மிகவும் சந்தோஷப்படுத்தியுள்ளது. மலையாள இயக்குநராக இருந்தாலும் மோகன்லால், மம்மூட்டியிடம்கூட முயற்சி செய்யாமல் இருந்த இயக்குநர் அல்போன்ஸ் புத்திரன் தமிழின் சூப்பர் ஸ்டார் நடிகரான ரஜினிக்கு கதை எழுதி வைத்திருப்பது அவரது பெருமையைக் குறிக்கிறது என்று ரஜினியை பாராட்டி எழுதிக் கொண்டிருக்கிறார்கள்.

- Advertisement -

Read more

Local News