Touring Talkies
100% Cinema

Friday, May 16, 2025

Touring Talkies

“அப்பா சுந்தர் சி. வேணாம்!”: குஷ்பு மகள் எடுத்த முடிவு!

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

இயக்குநர் சுந்தர். சி – நடிகை குஷ்பு தம்பதிக்கு  அவந்திகா, அனந்திகா ஆகிய இரண்டு மகள்கள் இருக்கின்றனர். இவர்களில் மூத்த மகளான அவந்திகா திரைத்துறையில் கால் பதிக்க இருக்கிறார் என சமீப காலமாக செய்தி உலா வந்தது.

இந்நிலையில், ‘அவந்திகா ஹீரோயினாக  வரவில்லை.. பிரபல இயக்குநர் மணிரத்தினத்திடம் உதவியாளராக சேர்ந்து இருக்கிறார்’ என்று தகவல் வெளியாகி இருக்கிறது.

இயக்குநர் மணிரத்னம், ‘பொன்னியின் செல்வன்’ இரண்டாம் பாகத்தை நிறைவு செய்யும் பணியில் ஈடுபட்டு உள்ளார். இதற்கிடையே, கமல்ஹாசனை வைத்து அவர் இயக்க உள்ள  படத்துக்கு  திரைக்கதை அமைக்கும் வேலைகளும் நடந்துகொண்டிருக்கிறது. இந்தக்குழுவில்தான் அவந்திகா இணைந்திருக்கிறார்’ என திரை வட்டாரத்தில் தகவல் உலா வருகிறது.

தனது தந்தை சுந்தர்.சி. மிகப்பெரிய இயக்குநராக இருந்தும், மணிரத்தினத்தை அவந்திகா நாடி இருக்கிறார்.

ஏற்கெனவே மணிரத்தினத்திடம் உதவியாளராக இருந்தவர், நடிகர் கார்த்தி என்பது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -

Read more

Local News