Thursday, April 11, 2024

“விருமன்’ படத்தின் வெற்றியை நான் எதிர்பார்க்கவில்லை” – பிரகாஷ்ராஜின் ஆச்சரியம்..!

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

நடிகர் சூர்யாவின் 2-டி எண்டர்டெயின்மென்ட் தயாரிப்பில் கார்த்தி, அதிதி ஷங்கர் நடிப்பில், இயக்குநர் முத்தையாவின் இயக்கத்தில் கடந்த வாரம் வெளியாகி தொடர்ந்து வசூல் வாகை சூடி வருகிறது விருமன்’ திரைப்படம்.

இந்த மாபெரும் வெற்றிக்கு துணை நின்ற நடிகர், நடிகைகள் மற்றும் டெக்னீஷியன்களின் குடும்பங்களை கொண்டாடும் வகையில், ‘விருமன்’ படத்தின் வெற்றி விழா, சென்னை வி.ஜி.பி. கோல்டன் பீச் ரிசார்ட்ஸில் நேற்று மாலை நடைபெற்றது.

இந்நிகழ்வில் நடிகர் பிரகாஷ் ராஜ் பேசும்போது, “இதைவிட வேறு என்ன வேண்டும்? இந்தப் படத்தின் கதையைக் கேட்டுவிட்டு படப்பிடிப்புக்கு செல்லும்போது கார்த்தியிடம் “தம்பி நல்லபடியா செய்வோம்” என்று கூறினேன். முத்தையா கதை சொல்லும்போது அழுது கொண்டே சொல்வார்.

இந்தப் படத்தை மக்கள் ஏற்றுக் கொள்வார்கள் என்று நான் எதிர்பார்க்கவில்லை. அதற்கும் மேலே அன்பை காட்டி இருக்கிறார்கள். இங்கிருக்கும் கூட்டம் போலவே படப்பிடிப்பிலும் கூட்டமாகவே இருந்தோம். இதற்காக ராஜாவிற்கு நன்றி.

பெரிய குடும்பம், நல்ல சாப்பாடு, எல்லோரிடமும் அன்பு. இவைகளோடு நல்லபடியாக முடிவடைந்திருக்கிறது. கார்த்தி, சூர்யா, பத்திரிகையாளர்கள் மற்றும் அனைவருக்கும் நன்றி. அனைவரின் நகைச்சுவைக்கும் நன்றி. லவ் யூ ஆல்…” என்றார்.

- Advertisement -

Read more

Local News