Tuesday, July 2, 2024

“சமந்தாவை பார்த்து அழுதுவிட்டேன்” – தொகுப்பாளர் ரம்யா..!

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

வி.ஜே ரம்யா மிஸ் சென்னை போட்டியில் பங்கேற்ற அவர் விஜய் தொலைக்காட்சியில் கலக்கப்போவது யாரு?, உங்களில் யார் அடுத்த பிரபுதேவா?, நம்ம வீட்டு கல்யாணம், கேடி பாய்ஸ் கில்லாடி கேல்ஸ் உள்ளிட்ட தொலைக்காட்சி நிகழ்ச்சிகள்  தொகுத்து வழங்கினார். திருமணத்திற்கு பிறகு தொலைக்காட்சி பணியை குறைத்துக் கொண்டு சினிமாவில் கவனம் செலுத்தினார்.

சில படங்களில் நடித்து நடிகையாகவும் இருக்கிறார்.

இவர் ஒரு யூடியூப் சேனலுக்கு அளித்த பேட்டியில் நானும் சமந்தாவும் உடற்பயிற்சி கூடத்தில் தான் சந்தித்தோம். அதன் பிறகு இருவரும் நல்ல தோழியார்களாக  மாறிவிட்டோம்.

இருவரும் இணைந்து அடிக்கடி வெளியில் செல்வோம்.

நல்ல சுறுசுறுப்பான ஒரு தைரியமான லேடி. சமந்தாவுக்கு உடல் நிலை சரியில்லாத போது நான் அவரை பார்க்க சென்றேன். என்னால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை.நான் அவங்களை அப்படிப் பார்த்தது கிடையாது.

நான் பார்த்துட்டு வெளியே வர்றேன் என் முகம் மறையும் வரை எனக்கு கை அசைச்சிட்டே இருந்தாங்க.. என்னால் அழுகையை அடக்க முடியவில்லை அழுதுவிட்டேன். இந்த நோயின் பிடியில் இருந்து மீண்டு வருவார் சமந்தா என்றார்  ரம்யா.

- Advertisement -

Read more

Local News