Saturday, July 27, 2024

“நான் சாதாரண ஆளுப்பா..”: ராஜ்கிரண்

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

ராஜ்கிரண் இயக்கம் அல்லது நடிப்பு என்றாலே, குடும்பத்துடன் பார்க்கும் படம் என்பதை உறுதி செய்து கொள்ளலாம். நாயகனாக நடித்தபோதும் சரி, தற்போது குணச்சித்திர கதாபாத்திரங்களில் நடிக்கும்போதும் சரி, தனக்கென ஒரு கொள்கை வைத்திருப்பவர் அவர்.

அவரது நடிப்பில் உருவாகி இருக்கும்  பட்டத்து அரசன் திரைப்படம் விரைவில் வெளியாக இருக்கிறது.

சமீபத்தில் அவர், “பல பேரு,’ராஜ்கிரணை பிடிக்கவே முடியாதுப்பா.. அப்படியே பார்த்து கதை சொன்னாலும் கதை பிடிக்கலேன்னா டென்சன் ஆயிருவாரு’ என்று சொல்வதாக கேள்விப்பட்டேன். திரைத்துறையிலேயே எளிதில் அணுகக்கூடியவன் நான்தான். பல நடிகர்களின் மேனேஜரை  பிடிக்கவே ஒரு வாரம் ஆகும். ஆனால்,எனக்கு பி.ஏ., மேனேஜர் என்று எவரும் இல்லை. மொபைலில் மெஸேஜ் அனுப்பினால் நானே தொடர்புகொண்டு பேசுவேன். நான் சாதாரண ஆள். ஆனால் எப்படி தப்பா நியூஸ் பரவுச்சின்னே தெரியலை”  என்றார் ராஜ்கிரண்.

- Advertisement -

Read more

Local News