ஜிகர்தண்டா டபுள் எக்ஸ் – விமர்சனம்

 

சுமார் 10 ஆண்டுகள் கழித்து மீண்டும் ஜிகர்தண்டா நமக்கு  ’டபுள் எக்ஸ்’ புதிய வடிவில் கொடுத்திருக்கிறார்  இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ். முந்தைய பாகத்தை விட இதில் கூடுதல் கற்பனை திறனை பயன்படுத்தியிருக்கிறார். ஜிகர்தண்டா போன்ற ஜிகர்தண்டா டபுள் எக்ஸ் படத்தில் இரண்டு முக்கிய கதாபாத்திரங்களை சுற்றி கதை நகர்கிறது. ஒருவர் இயக்குனர், மற்றொருவர் மோசமான ரவுடி. கதை 1970களில் நடப்பது போன்று காட்டியிருக்கிறார்கள். முதலில் மதுரையில் தொடங்கும் கதை பின்னர் காட்டுப் பகுதி நோக்கி செல்கிறது.

சினிமாவில் நடிக்க ஆசை இருக்கும்  ஒரு ரவுடியை சினிமாவில் நடிக்க வைத்து அவைரை சமூக அக்கறை உள்ள மனிதனாக மாற்ற ஒரு இயக்குனர் என்னவெல்லாம் செய்கிறார் என்பதுதான் படத்தின் தான் கதை.

மதுரையில் இருக்கும் பயங்கரமான ரவுடி  சீசரை (ராகவா லாரன்ஸ்) அறிமுகம் செய்து வைக்கிறார் இயக்குனர்  கார்த்திக் சுப்புராஜ். பிரபல ஹாலிவுட் நடிகரான கிளின்ட் ஈஸ்ட்வுட்டின் தீவிர ரசிகன் இந்த சீசர். அதனால் தான் தியேட்டரில் ஈஸ்வுட்டின் படங்களை மட்டுமே திரையிடுகிறார்கள். ஹீரோவாகி, ஈஸ்ட்வுட் பட பாணி படங்களில் நடிக்க விரும்புகிறார் சீசர்.

சத்யஜித் ரேயின் உதவியாளர் என்று சொல்லும் ரே தாசனுக்கு(எஸ்.ஜே. சூர்யா) சீசரின் முதல் படத்தை இயக்கும் வாய்ப்பு கிடைக்கிறது. ஆனால் ரே தாசனின் நோக்கம் படம் இயக்குவது மட்டும் அல்ல என்பது சீசருக்கு தெரியாது.

கதை நகர நகர, சீசரின் வாழ்க்கையை ரே தாசன் படமாக்க எதிர்பாராத விஷயங்களை எல்லாம் இருவரும் கண்டுபிடிக்கிறார்கள்.

படத்தின்   தொடக்கம் சுவாரஸ்யமாக குறையாமல் நகர்ந்து கிளைமாக்ஸ்  காட்சிகளில் தக்கான பாணியில் கதை நகர்த்தி ரசிகர்களின் பாராட்டு பெறுகிறார்.  முதல் படத்தின் சாயலுடன் டபுள் ஸ்ட்ராங்காக ரசிகர்களுக்கு கொடுத்திருக்கிறார் கார்த்திக் சுப்புராஜ்.

ராகவா லாரன்ஸ், எஸ்.ஜே. சூர்யா இருவரும் போட்டி போட்டுக்கொண்டு தனக்கான கதாப்பாத்திரங்களில் திறமையான நடிப்பை வெளிப்படுத்தி இருக்கின்றார்கள். இடைவேளை காட்சி அற்புதம். ஒவ்வொரு காட்சிகளும் ரசித்து கொடுத்ததில் இயக்குனர் ரசிகர்களை கவர்ந்து விட்டார். படத்தின் நீளம் சற்று அதிகம் தான் இருந்த போதிலும் படம் ரசிக்க வைக்கிறது. ராகவா லாரன்ஸ் புதிய தோற்றம் வேறு ஒரு இமேஜை அவருக்கு கொடுத்திருக்கிறது.

ரவுடியாக இருந்து ஹீரோவாக மாறும் ராகவா லாரன்ஸின் நடிப்பு பாராட்ட வைக்கிறது அற்புதம். எஸ். ஜே. சூர்யா வழக்கம் போன்ற சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி உள்ளார்.

டாம் சாக்கோ, நிமிஷா சஜயன் ஆகியோர் தங்கள் கதாபாத்திரத்தை உணர்ந்து நடித்திருக்கிறார்கள். ’ஜிகர்தண்டா டபுள் எக்ஸ்’ தீபாவளிக்கு சரவெடி, அதிரடி படமாக ரசிகர்களுக்கு விருந்து படைத்து விட்டார் இயக்குனர் கார்த்திக்  சுப்புராஜ்.