Thursday, April 11, 2024

“பெருந்தன்மை உதயநிதி!” : மகிழ் திருமேனி சொல்லும் சம்பவம்

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

அருண் விஜய் நடித்த, தடம் உள்ளிட்ட படங்களை இயக்கிய மகிழ் திருமேனி, தற்போது உதயநிதி ஸ்டாலின் நடி்குகம் , ‘கலகத்தலைவன்’ திரைப்படத்தை உருவாக்கிக் கொண்டு இருக்கிறார்.

இது குறித்த ஒரு சம்பவத்தை வார இதழ் ஒன்றில் முதன் முதலாக வெளிப்படுத்தி இருக்கிறார்.

அவர், “முதலில் உதயநிதியிடம்தான் தடம் கதையைச் சொன்னேன். அவருக்கு அந்தக் கதை பிடித்து இருந்தது. ஆனால் சில காரணங்களால் அவர் நடிக்க முடியவில்லை. அதன் பிறகு அருண் விஜய் நடிக்க முடிவானது.  படப்பிடிப்புக்கான ஏற்பாடுகளை செய்ய ஆரம்பித்த நேரம்.

அப்போது உதயநிதியிடம் இருந்து அழைப்பு வந்தது. “தடம் படத்தை ஆரம்பிக்கலாம்” என்றார்.

நான், “மன்னிக்கணும் சார்.. வேறு நிறுவனத்துக்கு வாக்கு கொடுத்து விட்டேன்” என்றேன். அவரது ரீயாக்சன் எப்படி இருக்குமோ என்று நினைத்தேன்.

ஆனால் அவரே ஒரே வார்த்தையில், “சிறப்பாக செய்யுங்கள்.  அடுத்த படத்தில் இணைவோம்” என்றார்.

அதே போல தடம் படம் முடிவடைந்ததும், என்னை அழைத்து இந்த படத்துக்கான அட்வான்ஸ் அளித்தார்.

அந்த அளவுக்கு பெருந்தன்மையான மனிதன் உதயநிதி” என்றார் மகிழ் திருமேனி.

- Advertisement -

Read more

Local News