Thursday, April 11, 2024

சிம்புவுக்கு வில்லனான கவுதம் மேனன்

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

‘பத்து தல’ படத்தில் சிம்புவுக்கு வில்லனாக கவுதம் மேனன் நடிக்கவுள்ளதாக அப்படத்தின் இயக்குநரான கிருஷ்ணா தெரிவித்துள்ளார்.

சிம்புவை வைத்து இயக்குநர் கவுதம மேனன் ‘விண்ணைத் தாண்டி வருவாயா’, ‘அச்சம் என்பது மடமையடா’ மற்றும் ‘வெந்து தணிந்தது காடு’ ஆகிய படங்களை இயக்கியுள்ளார். இதில் ‘வெந்து தணிந்தது காடு’ படம் அடுத்த மாதம் 15-ம் தேதி திரைக்கு வரவுள்ளது.

இந்தப் படத்தை தொடர்ந்து சிம்பு நடிக்கும் படம் பத்து தல. ஸ்டூடியோ க்ரீன் நிறுவனம் தயாரிப்பில் உருவாகும் இப்படத்தில் சிம்புவுடன் கவுதம் கார்த்திக், ப்ரியா பவானி சங்கர் உள்ளிட்டோரும் நடிக்கின்றனர்.

இந்தப் ‘பத்து தல’ படத்திற்கு ஏ.ஆர்.ரகுமான் இசையமைப்பதால் படத்திற்குப் பெரும் எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.

கன்னடத்தில் மெகா ஹிட்டான ‘முப்தி’ படத்தின் ரீமேக்காக இந்தப் பத்து தல படம் உருவாக்கப்படுகிறது. இருப்பினும், தமிழ் ரசிகர்களுக்கேற்ப பல மாற்றங்களை செய்திருப்பதாக இயக்குநர் கிருஷ்ணா சொல்லியுள்ளார்.

இந்நிலையில் ‘பத்து தல’ படத்தில் வில்லனாக இயக்குநர் கவுதம் மேனன் நடிக்கவுள்ளார் என்று இயக்குநர் கிருஷ்ணா அப்டேட் கொடுத்துள்ளார்.

‘கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால்’, ‘அச்சம் என்பது மடமையடா’, மலையாளத்தில் ஹிட்டான ‘ட்ரான்ஸ்’ உள்ளிட்ட படங்களில் கவுதம் மேனன் மிரட்டலான நடிப்பை வெளிப்படுத்தி இருப்பார்.  இந்நிலையில் ‘பத்து தல’ படத்தில் கவுதம மேனன் வில்லனாக நடிப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

இந்தப் படத்தின் ஷூட்டிங் சென்னை, கர்நாடகா, கன்னியாகுமரி உள்ளிட்ட இடங்களில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

இந்தப் படம் வரும் டிசம்பர் மாதம் திரைக்கு வரவுள்ளது.

- Advertisement -

Read more

Local News