Friday, April 12, 2024

‘அழகிய கண்ணே’ படத்திற்காக பாடல் பாடிய G.V.பிரகாஷ் குமார்…!

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

பிரபல திரைப்பட தயாரிப்பாளரான சேவியர் பிரிட்டோவின் ‘எஸ்தல் எண்டர்டெய்னர்’ நிறுவனத்தின் சார்பில் தயாரிக்கும் திரைப்படம் ‘அழகிய கண்ணே’.

அறிமுக நடிகர் லியோ சிவக்குமார் இந்தப் படத்தில் கதாநாயகனாக நடிக்கிறார். கதாநாயகியாக சஞ்சிதா ஷெட்டி நடிக்கிறார். மேலும் முக்கிய கதாபாத்திரங்களில் பிரபு சாலமன், விஜய் டிவி புகழ் ஆண்ட்ரூஸ் ஆகியோரும் நடிக்கிறார்கள்.

இயக்கம்  – R.விஜயகுமார், தயாரிப்பு – சேவியர் பிரிட்டோ (எஸ்தல் எண்டர்டெய்னர்), பாடல்கள் – வைரமுத்து, இசை – N.R.ரகுநந்தன், ஒளிப்பதிவு – A.R.அசோக் குமார், படத் தொகுப்பு – சங்கத் தமிழன், நடன இயக்கம் – ராதிகா, சண்டை இயக்கம் – மாஸ்டர் புகழ் ஸ்டண்ட் சில்வா, தயாரிப்பு மேற்பார்வை – இளையராஜா செல்வம், மக்கள் தொடர்பு – ரியாஸ் கே.அஹ்மத்.

இத்திரைப்படத்தை இயக்குநர் சீனு ராமசாமியிடம் துணை இயக்குநராகப் பணியாற்றிய இயக்குநர் R.விஜயகுமார் இயக்குகிறார்.

N.R.ரகுநந்தன் இசையமைப்பில் இப்படத்திற்காக நடிகர், பாடகர், இசையமைப்பாளர் என பன்முக திறமை வாய்ந்த G.V.பிரகாஷ் குமார் ஒரு பாடல் ஒன்றை பாடியுள்ளார்.

- Advertisement -

Read more

Local News