கமல்ஹாசனின் மகளான அக்ஷரா ஹாசன், தனது பெயர் மற்றும் குடும்பப் பெயரை தவறாக பயன்படுத்தி ஒரு நபர் மோசடி செய்து வருவதாக கூறி எச்சரிக்கை விடுத்துள்ளார். இதுதொடர்பாக தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அவர் வெளியிட்டிருக்கும் பதிவில்,

“இப்ராஹிம் அக்தர் எனும் நபர், எனது பெயரையும், என் குடும்பத்தின் பெயரையும் தவறாக பயன்படுத்தி, ஊட்டியில் அலுவலகம் நடத்தி, நாங்கள் திரைப்படத் தயாரிப்பு பணிகளில் ஈடுபட்டு வருகிறோம் எனக் கூறுகிறார். இது முற்றிலும் தவறான தகவல். அவருக்கும் எங்களுக்கும் எந்தவிதமான தொடர்பும் இல்லை.
இந்த விவகாரத்தில் தேவையான சட்ட நடவடிக்கைகளை எடுக்கத் தொடங்கியுள்ளோம். தயவுசெய்து அவரிடம் எச்சரிக்கையுடன் இருங்கள். எந்தவிதத்திலும் அவருடன் தொடர்பு கொள்ளவோ அல்லது அவரை ஊக்குவிக்கவோ வேண்டாம். உங்கள் கவனத்திற்கும், தொடர்ந்து எங்களுக்கு வழங்கும் ஆதரவிற்கும் என் நன்றிகள் என அவர் தெரிவித்துள்ளார்.