இயக்குநர் பாண்டிராஜின் இயக்கத்தில் நடிகர் சூர்யா நடிக்கும் அவருடைய 40-வது படமான ‘எதற்கும் துணிந்தவன்’ படத்தின் படப்பிடிப்பு நேற்றுடன் முடிவடைந்தது.
இந்தப் படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது. படத்தில் சூர்யாவுக்கு ஜோடியாக இளம் நடிகை பிரியங்கா மோகன் நடிக்கிறார். மேலும் திவ்யா துரைசாமி, சரண்யா பொன்வண்ணன், தேவதர்ஷினி, சத்யராஜ், சூரி ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
டி.இமான் இசையமைக்கும் இப்படத்திற்கு ரத்னவேலு ஒளிப்பதிவு செய்துள்ளார்.
இப்படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பு கடந்த ஜூலை மாதம் காரைக்குடியில் தொடங்கியது.
தொடர்ந்து 51 நாட்கள் விறுவிறுப்பாக நடைபெற்று வந்த படப்பிடிப்பு நேற்று முடிவடைந்தது.
மழை, வெயில் பார்க்காமல் கடினமாக உழைத்ததால் இது சாத்தியமானது என தெரிவித்துள்ள இயக்குநர் பாண்டிராஜ், சூர்யா உள்ளிட்ட படக் குழுவினருக்கு தனதி டிவீட்டர் பக்கத்தில் நன்றி தெரிவித்து செய்தியை வெளியிட்டுள்ளார்.
இந்தப் படம் இந்தாண்டு இறுதிக்குள்ளாக வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.