நடிகர் மம்முட்டியின் மகனும் நடிகருமான துல்கர் சல்மான் அளித்த சமீபத்திய பேட்டியில் நடக்க முடியாத ஒரு ஆசையை பகிர்ந்துகொண்டு இருக்கிறார்:
“நான் எல்லாவிதமான கதாபாத்திரத்திலும் நடிக்க விரும்புகிறேன். நான் சென்னையில்தான் படித்தேன்.. வளர்ந்தேன். சத்யம் தியேட்டர், பெசன்ட் நகர் பீச்.. இப்படி சென்னை நகரின் அனைத்து பகுதிகளும் எனக்கு நன்றாக தெரியும். இவை அந்தக் காலத்தில் எப்படி இருந்திருக்கும் என அடிக்கடி யோசிப்பேன். அதே போல பீரியட் படங்களில் நடிக்க வேண்டும் என்கிற ஆசை அதிகமாக இருக்கிறது.
ஒருவேளை நான் இருபது வருடங்களுக்கு முன்பாக.. 1960ல் பிறந்திருந்தால் இன்னும் நன்றாக இருந்திருக்குமோ” என்று கூறி சிரித்தார் துல்கர் சல்மான்.