Saturday, July 27, 2024

“அழமாட்டேன்..”: அடம் பிடித்த ரஜினி!

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

பாலச்சந்தர் எஸ்.பி.முத்துராமன் இவர்களுக்கு பிறகு ரஜினி கமல் இருவரின் படங்களையும் அதிகமாக இயக்கிய பெருமைக்கு சொந்தக்காரர் இயக்குனர் கே.எஸ்.ரவிக்குமார். ரஜினிக்கு முத்து படையப்பா லிங்கா ஆகிய படங்கள் என்றால் கமல்ஹாசனுக்கு அவ்வை சண்முகி, தெனாலி, தசவதாரம் என பல வெற்றிப்படங்களை கொடுத்துள்ளார்.

இவர்கள் இருவரையும் மாறி மாறி இயக்கி இருந்தாலும் நடிப்பில் இருவருமே வித்தியாசம் காட்டுவார்கள். என்று கே.எஸ்.ரவிக்குமார் கூறியுள்ளார்.

“படையப்பா படத்தில் ரஜினி அழும் காட்சி ஒன்றில் ரஜினிகாந்த் நடிக்க மறுத்துவிட்டார். ‘நான் அழுதா நன்றாக இருக்குமா. நீங்கள் கமல் மாதிரியான நடிப்பை என்னிடம் எதிர்பாக்கிறீர்களே’ என்றார். நான், ‘நீங்கள் ஒரு மாஸ் ஹீரோ நீங்கள் அழுதால் ஆடியன்ஸ் கூட நல்லா கனெக்ட் ஆகும்’ என்று சொன்னபிறகு நடித்தார்.

அதுதான் சித்தாராவுக்கு சாப்பாடு ஊட்டும் காட்சி அந்த காட்சி ஒரு ஷாட்டில் எடுக்கப்பட்டது. அப்போது ரஜினி உண்மையானவே அழுதார். கிளிசர் பயன்படுத்தாமல் அவரது கண்களில் கண்ணீர் வந்தது” என கே.எஸ்.ரவிக்குமார் கூறியுள்ளார்.

- Advertisement -

Read more

Local News