Thursday, April 11, 2024

நஷ்டத்தில் இருந்த தேவர் பிலிம்ஸ் ஸ்ரீபிரியாவால் மீண்டது..!

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

தமிழ் சினிமாவில் மிகப் பெரிய நடிகையாக 1970 களில் வலம் வந்தவர் ஸ்ரீபிரியா. சினிமாவின்  உச்சத்தில் இருந்த  ஜாம்பவான்களின் 1980 களில் முன்னணி நடிகையாக இருந்தவர்.இவர் தெலுங்கு, கன்னடம், மற்றும் மலையாள படங்கள் என 350 க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார்.

தமிழில் மட்டும் 200க்கு மேற்பட்ட திரைப்படங்களில் நடித்துள்ளார். ஆனால் முதன் முதலில் ‘ஆண் பிள்ளை சிங்கம்’ என்ற படத்தில் சிவகுமாருக்கு நாயகி அறிமுகமானார்


அவர் சினிமாவில் உச்சத்தில் இருக்கும் போது பிரபலமாக இருந்த தேவர் பிலிம்ஸ் நிறுவனம் எதிர்பாராத விதமான நஷ்டத்தில் இயங்க தொடங்கியது. இந்த சூழ்நிலையில் கடைசி முயற்சியாக ஸ்ரீபிரியாவை வைத்து ஆட்டுக்கார அலமேலு படத்தை தயாரிக்க முடிவு செய்தது. அந்த படம் சரியாக ஓடவில்லை என்றால் சினிமாவை விட்டு விலகும் நோக்கத்துடன் இருந்தது தேவர் பிலிம்ஸ்.


ஆனால் அவர்கள் எதிர்பார்த்ததை விடவும் படம் அமோக வெற்றி அடைந்தது.

தேவர் பிலிம்ஸ் ஸ்ரீப்ரியாவால் தான் மீண்டதாக நினைத்தனர். அதன் பிறகு  தேவர் பிலிம்ஸ் ஸ்ரீபிரியாவை வைத்து எடுக்கும் படங்களில் நடிகர் யாராக இருந்தாலும் முதல் காட்சியை ஸ்ரீபிரியாவை வைத்து தான் தொடங்குவார்கள்.

- Advertisement -

Read more

Local News