Touring Talkies
100% Cinema

Friday, May 16, 2025

Touring Talkies

முத்தம் கொடுத்துவிட்டு மன்னிப்பு கேட்டார் நாக சைதன்யா :  இளம் நடிகை ஓப்பன் டாக் 

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

தெலுங்கு சினிமா உலகில் மிக பிரபலமான நடிகராக திகழ்ந்து கொண்டிருப்பவர் நாக சைதன்யா. இவர் தெலுங்கு சூப்பர் ஸ்டார் நடிகர் நாகார்ஜுனாவின் மகன். இவர் 2009 ஆம் ஆண்டு வெளிவந்த ஜோஸ் என்ற படத்தின் மூலம் தான் சினிமா துறைக்கு அறிமுகமானார். அதனை தொடர்ந்து இவர் பல படங்களில் நடித்து இருக்கிறார்.

இதனிடையே நடிகர் நாக சைதன்யாவுக்கும், சமந்தாவிற்கும் இடையே காதல் மலர்ந்தது. இதையடுத்து இவர்கள் இருவரும் கடந்த 2017 ஆம் ஆண்டு இரு வீட்டார் சம்மதத்துடன் திருமணம் செய்து கொண்டார்கள். ஆனால், சமந்தாவுக்கும், நாக சைதன்யாவுக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டு பிரிய இருப்பதாக கடந்த 2021 ஆம் ஆண்டு சோசியல் மீடியாவில் அறிவித்து இருந்தார்கள்.

இந்நிலையில் நாக சைத்தன்யா குறித்து நடிகை தக்ஷா நகர்கர் அளித்திருக்கும் பேட்டி தற்போது சோசியல் மீடியாவில் வைரல் ஆகி வருகிறது. 2022 ஆம் ஆண்டு நாகச் சைதன்யாவின் நடிப்பில் வெளிவந்திருந்த பங்கர் ராஜுவில் “எந்த சக்ககுண்டிரோ” என்ற பாடலுக்கு நடனமாடியிருந்தார்.

நாக சைதன்யாவுடன் பணிபுரிந்தது  குறித்து, “ நாக சைதன்யா பெண்கள் மீது அதிக அக்கறை கொண்ட ஒரு இனிமையான, எளிமையான மனிதர். ஒரு காட்சியில் முத்தமிடவோ அல்லது கட்டிப் பிடிக்கவோ நெருங்கும் போதெல்லாம் அவர் மன்னிப்பு கேட்பார். அது அவருடைய மரியாதைக்குரிய தன்மை” என்று புகழ்ந்து கூறியிருந்தார்.

- Advertisement -

Read more

Local News