Friday, April 12, 2024

பிக்பாஸ் சீஸன்-5 டைட்டில் வின்னராக ராஜூ வெற்றி பெற்றார்

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

விஜய் தொலைக்காட்சியில் நடைபெற்று வந்த பிக்பாஸ் 5-வது சீஸன் டைட்டிலை போட்டியாளர் ராஜூ வென்றுள்ளார்.

விஜய் தொலைக்காட்சியில் பிக்பாஸ் என்ற ரியலிட்டி ஷோ தொடர்ந்து 5-வது ஆண்டாக நடந்து வருகிறது. 100 நாட்கள் ஒரு வீட்டுக்குள் 15 போட்டியாளர்கள் சில நிபந்தனைகளுடன் இருக்க வேண்டும். தினமும் அவர்களிடையே போட்டிகள் நடைபெறும். இவர்களில் சிறந்தவர்கள் யார் என்று தொலைக்காட்சி ரசிகர்களிடையே வாக்குப் பதிவு நடைபெறும். ஒவ்வொரு வாரமும் இந்த வாக்குப் பதிவில் முகக் குறைந்த வாக்குகளைப் பெற்றவர் வெளியேற்றப்படுவார். மற்றவர்கள் அந்த வீட்டிலேயே தொடர்வார்கள்.

இப்படி 100 நாட்கள்வரையிலும் தாக்குப் பிடித்து கடைசியில் அதிக வாக்குகளைப் பெற்ற போட்டியாளர் வெற்றியாளராக அறிவிக்கப்படுவார்.

கடந்த 4 சீஸன்களும் விஜய் தொலைக்காட்சியில் இந்த நிகழ்ச்சி ஒளிபரப்பாகி பெரும் வரவேற்பைப் பெற்றது. தற்போது 5-வது சீஸனும் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பானது. இந்த சீஸனில் ராஜூ, பிரியங்கா, நிரூப், அபிஷேக், இமான் அண்ணாச்சி, சின்னப் பொண்ணு, பாவ்னி, ஐக்கி பெர்ரி, மதுமிதா, சம்யுக்தா, தாமரைச் செல்வி, சிபி, வருண், அக்சரா, நாடியா சாங், அபிநய் ஆகிய 15 பேர் முதல் நாளில் இருந்தே போட்டியிட்டனர். இடையில் வைல்டு கார்டு எண்ட்ரியாக டிவி நடிகர் சஞ்சீவும், நடனக் கலைஞர் அமீரும் உள்ளே வந்தனர்.

பல்வேறு போட்டிகளுக்கிடையே கடைசி வாரத்தில் ராஜூ, பிரியங்கா, பாவ்னி, அமீர், நிரூப் ஆகிய 5 பேர் மட்டுமே அந்த வீட்டில் இருந்தனர். இவர்களில் யாருக்கு டைட்டில் என்ற கடைசிக் கட்ட போட்டி நேற்றைக்கு நடைபெற்றது.

அப்போது அதிகப்படியான வாக்குகளைப் பெற்றிருந்த ராஜூ இந்த பிக்பாஸ் சீஸன்-5-ன் டைட்டில் வின்னராக அறிவிக்கப்பட்டார். இவருக்கு பரிசுத் தொகையாக 50 லட்சம் ரூபாய் தரப்பட்டது.

இரண்டாமிடத்தை பிரியங்காவும், மூன்றாமிடத்தை பாவ்னியும், நான்காமிடத்தை அமீரும், ஐந்தாமிடத்தை நிரூப்பும் பிடித்தனர்.

- Advertisement -

Read more

Local News