Touring Talkies
100% Cinema

Monday, October 6, 2025

Touring Talkies

“வாரிசு’க்கு முன்.. ‘வாரிசு’க்கு பின்” என்று நிலைமை மாறும்” – இயக்குநர் லிங்குசாமி எச்சரிக்கை

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

பண்டிகை நாட்களில் ஆந்திரா மற்றும் தெலுங்கானாவில் நேரடி தெலுங்கு படங்களுக்குத்தான் அதிக தியேட்டர்களை ஒதுக்க வேண்டும் என்று சமீபத்தில் தெலுங்கு தயாரிப்பாளர்கள் சங்கம் தடாலடியாக அறிவித்துள்ளது. இதனால் விஜய் நடிப்பில் உருவாகியிருக்கும் வாரிசு படத்திற்கு சிக்கல் ஏற்பட்டுள்ளது.

இது குறித்து இயக்குநர் லிங்குசாமி கருத்து தெரிவிக்கையில், “தற்போது ஆந்திராவில் பண்டிகை காலங்களில் தமிழ் படங்களை திரையிடக் கூடாது என தெலுங்கு தயாரிப்பாளர் சங்கம் முடிவெடுத்திருப்பது தவறானது. இப்போது வெளியாகும் படங்கள் எல்லாம் நன்றாக ஓடுகின்றன. இது சினிமாவிற்கு ஒரு பொற்காலம். இந்த சமயத்தில் இப்படி ஒரு பிரச்சனை வரவே கூடாது.

‘வாரிசு’ ரிலீஸ் விஷயத்தில் சரியான ஆட்கள் பேசி இதற்கு ஒரு தீர்வு காண வேண்டும். குறுகிய எண்ணத்தோடு யாராவது இப்படி ஒரு முடிவெடுத்து இருந்தால், நிச்சயமாக ‘வாரிசு’க்கு முன்; ‘வாரிசு’க்கு பின் என்று இந்திய சினிமாவும் மாறிவிடும். அதனால் இப்போது ஏற்பட்டிருப்பது ஒரு சின்ன சலசலப்புதான். இது விரைவில் சரியாகிவிடும் என நம்புகிறேன்..” என்றார்.

- Advertisement -

Read more

Local News