‘ஓ மை கடவுளே’, ‘டிராகன்’ போன்ற திரைப்படங்களை இயக்கியவர் அஸ்வத் மாரிமுத்து. இவர் அடுத்ததாக சிம்பு நடிக்கும் புதிய திரைப்படத்தை இயக்க தயாராகி வருகிறார்.

இந்தப் படத்தில் உதவி இயக்குநர்களாக பணியாற்ற புதிய நபர்கள் தேவை என்று கூறி, சமூக வலைதளங்களில் ஒரு அறிவிப்பை அவர் வெளியிட்டிருந்தார். அந்த அறிவிப்பை பார்த்து தற்போது 15 ஆயிரம் பேர் விண்ணப்பித்துள்ளார்களாம்.
சமீபத்தில், அஸ்வத் மாரிமுத்து வெளியிட்டுள்ள புதிய செய்தியில், “முதலில் 10 உதவி இயக்குநர்களை மட்டும் தேர்வு செய்ய திட்டமிட்டிருந்தேன். ஆனால் இப்போது இந்த 15 ஆயிரம் பேரின் மத்தியில் இருந்து, என்னுடைய அடுத்த இரண்டு படங்களுக்கும் சேர்த்து மொத்தமாக 20 நபர்களை தேர்வு செய்ய இருக்கிறேன். என்னை டேக் செய்து சமூக வலைதளங்களில் பதிவிடும் அனைவருக்கும் இதை தெரிவித்துக்கொள்கிறேன்” என்று பதிவிட்டுள்ளார்.