Thursday, April 11, 2024

“வாக்காளர் அட்டை வைத்திருப்பவர்களெல்லாம் சினிமா வாய்ப்பு கேக்குறாங்க” – நடிகர் ‘காதல்’ சுகுமார் பேச்சு

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

“இப்போது ‘வாக்காளர் அடையாள அட்டை’ வைத்திருப்பவர்களெல்லாம் சினிமாவில் வாய்ப்பு கேட்டு வருகிறார்கள்” என்கிறார் நடிகரும், இயக்குநருமான காதல் சுகுமார்.

சென்னையில் நேற்று மாலை நடந்த ஒரு இசை ஆல்பம் வெளியீட்டு விழாவில் பேசும்போது ‘காதல்’ சுகுமார் இதைத் தெரிவித்தார்.

அவர் மேலும் பேசும்போது, “வீட்டைக் கட்டிப் பார்; கல்யாணம் பண்ணிப் பார்’ என்பது போல் ‘சினிமா எடுத்துப் பார்’ என்றும் சொல்லலாம். சினிமா எடுப்பது அவ்வளவு சிரமமானது. நான் 200 படங்களில் நடித்திருக்கிறேன். ஆனால், இன்னமும் சினிமாவின் வெற்றிக்கான சூட்சுமம் எனக்குப் புரியவில்லை.

இப்போது ஏராளமான பேர் வாய்ப்பு கேட்டு வருகிறார்கள். வாக்காளர் அட்டை உள்ளவர்கள் எல்லாம் வாய்ப்பு தேடி வந்து விட்டார்கள். அந்த அளவிற்குப் போட்டி நிறைந்ததாக இருக்கிறது சினிமாவுலகம்.

எனவே தயாரிப்பாளர் அருண் குமாரசாமி அவர்கள் சினிமாவை நன்றாகத் தெரிந்து கொண்டு படம் தயாரிக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன். இங்கே அறிவுரை சொல்வதற்கு நிறைய ஆட்கள் இருக்கிறார்கள். அதேபோல தவறாக வழிகாட்டுபவர்கள்கூட இங்கு அதிகம்.  எனவே சரியான நபர்களைக் தேர்ந்தெடுத்து அவர் படம் எடுக்க வேண்டும்…” என்று கூறினார்.

- Advertisement -

Read more

Local News