Thursday, April 11, 2024

டோவினோ தாமஸ் 3 வேடங்களில் நடிக்கும் ‘அஜயந்தே ரண்டம் மோஷனம்’ துவங்கியது

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

மலையாள திரையுலகின் முன்னணி நடிகரான டோவினோ தாமஸ் தனது திரைப் பயணத்தில் முதல் முறையாக 3 வேடங்களில் நடிக்கும் திரைப்படம் ‘அஜயந்தே ரண்டம் மோஷனம்’.

மிகப் பெரிய பட்ஜெட்டில் உருவாகும் இப்படத்தை UGM Productions நிறுவனம் தயாரிக்கிறது. Magic Frames நிறுவனம் இந்தப் படத்தின் தயாரிப்பில் இணைந்துள்ளது.  

இந்தப் படத்தில் கீர்த்தி ஷெட்டி, ஐஸ்வர்யா ராஜேஷ் மற்றும் சுரபி லட்சுமி என மூன்று நாயகிகள் நடிக்கின்றனர். இளைஞர்களின் உள்ளம் கவர்ந்த தென்னிந்திய திரையுலகின் தற்போதைய பிரபல நடிகையான கீர்த்தி ஷெட்டி நடிக்கும் முதல் மலையாளப் படம் இதுவாகும்.

மேலும் இப்படத்தில் பாசில் ஜோசப், கிஷோர், ஹரிஷ் உத்தமன், ஹரீஷ் பேரடி, ஜெகதீஷ் ஆகியோர் மற்ற முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர்.

இசை – திபு நினன் தாமஸ்,  தயாரிப்பு வடிவமைப்பாளர் –  கோகுல் தாஸ், ஆடை வடிவமைப்பாளர் – பிரவீன் வர்மா, ஒப்பனை – ரோனெக்ஸ் சேவியர், புரொடக்சன் கண்ட்ரோலர் – பாதுஷா, படத் தொகுப்பு – ஷமீர் முகமது, புகைப்படங்கள் – ஜோமோன் T.ஜான், விளம்பர வடிவமைப்பு  – பப்பட் மீடியா, டிஜிட்டல் மார்க்கெட்டிங் – தனய் சூர்யா & திலீப் லெக்கலா (trendy tolly), பத்திரிகை தொடர்பு – சதீஷ் குமார் (AIM).

இப்படத்திற்கு கதை மற்றும் திரைக்கதையை சுஜித் நம்பியார் எழுதியுள்ளார். அறிமுக இயக்குரான ஜிதின் லால் இயக்குகிறார்.

மூன்று வெவ்வேறு  காலகட்டங்களில் நடக்கும் கதையை சொல்லும் இப்படத்தில் டோவினோ தாமஸ் மூன்று கதாபாத்திரங்களில் நடிக்கிறார். படத்தின் டைட்டில் கேரக்டர்களான மணியன்’, ‘அஜயன்’, ‘குஞ்சிகேலு’  மூன்று பாத்திரங்களில் மாறுபட்ட தோற்றங்களில் டோவினோவே நடிக்கவுள்ளார்.

இப்படத்தின் திரைக்கதை கேரளாவின் களரி’ எனும் தற்காப்புக் கலைக்கு அதிக முக்கியத்துவம் கொடுத்து எழுதப்பட்டுள்ளது. இப்படத்தில் நிறைய ஆக்‌ஷன் காட்சிகள் இருப்பதால், இதற்காக நடிகர் டோவினோ தாமஸ் பிரத்யேகமாக களரி பயிற்சியில் ஈடுபட்டு வருகிறார்.

பான்-இந்திய திரைப்படமாக பெரிய பட்ஜெட்டில் உருவாகும் இந்த ‘அஜயந்தே ரண்டம் மோஷனம்’ படம் 3-டி தொழில் நுட்பத்தில் வெளியாகவுள்ளது.

பிரம்மாண்டமாக உருவாகும்  இப்படத்தின் பூஜை இன்று நடைபெற்றது.

- Advertisement -

Read more

Local News