தமிழ் சினிமாவில் பல நட்சத்திர தம்பதிகள் ரசிகர்களால் கொண்டாடப்படுகின்றனர். அதில் புன்னகை அரசி என அழைக்கப்படும் சினேகா முக்கியமானவர். சுசி கணேசன் இயக்கிய “விரும்புகிறேன்” படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமானார். முதற்படம் வெற்றி பெறாவிட்டாலும், சினேகாவின் நடிப்பும் அழகும் அவருக்கு தொடர்ந்து பல பட வாய்ப்புகளை கிடைக்கச் செய்தது.
பின்னர் விஜய், சூர்யா, விக்ரம், கமல்ஹாசன், சிம்பு, தனுஷ் உள்ளிட்ட முன்னணி நடிகர்களுடன் இணைந்து தமிழ் சினிமாவின் முக்கிய கதாநாயகியாக முன்னேறினார். இதனைத் தொடர்ந்து அவர் நடிகர் பிரசன்னாவை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இத்தம்பதிக்கு ஒரு மகன் மற்றும் ஒரு மகள் உள்ளனர்.
சமூக வலைத்தளங்களில் ஆக்டிவாக இருக்கும் நடிகை சினேகா, திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவிலில் பங்குனி மாத தேய்பிறை பிரதோஷத்தை முன்னிட்டு, தனது கணவருடன் கிரிவலம் மேற்கொண்டார். எளிமையாக பக்தர்களுடன் இணைந்து கிரிவலம் மேற்கொண்டு தேங்காய் உடைத்து வழிபாடு செய்தார். கிரிவலப்பாதையில் நடிகை சினேகாவை கண்ட ரசிகர்கள் அவருடன் செல்ஃபி எடுத்துக் கொண்டனர்.