கொல்கத்தாவை சேர்ந்த சயானி பிரதன், மாடலிங் துறையில் ஈடுபட்டு பிறகு திரையுலகுக்கு வந்தவர். அதனாலோ என்னவோ, தனது கவர்ச்சிப் படங்களை, வித்தியாசமான கேமரா கோணங்களில் எடுத்து இன்ஸ்டாகிராமில் தொடர்ந்து பதிவிட்டு வருகிறார்.
சமீபத்தில் ஒரு பேட்டியில், “இன்ஸ்டா கிராமில் நான் வெளியிடும் படங்களை பலரும் ரசிக்கிறார்கள். ஆனால் அவர்களில் ஒரு ரசிகரை மறக்கவே முடியாது. டில்லியைச் சேர்ந்த அவர், எனக்கு கொரியரில் ஒரு சுடிதார் அனுப்பினார். ‘உங்களுக்கு இந்த ஆடை மிகவும் பொருத்தமாக இருக்கும்’ என்றும் எழுதி இருந்தார்.
அட இப்படியும் ஒரு ரசிகரா என்று ஆச்சரியப்படு, கொரியரில் இருந்த அலைபேசி எண்ணுக்கு அழைத்தேன். ஆனால் அந்த எண் எடுக்கவில்லை. இன்று வரை அவர் யார் என தெரியவில்லை. ஆனாலும் அவரது அன்மை மறக்க முடியவில்லை” என்று தெரிவித்து இருக்கிறார் சயானி.