Friday, April 12, 2024

ஹாலிவுட் சண்டை இயக்குநருடன் பணியாற்றும் சமந்தா..!

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

பிரபல ஹாலிவுட் ஸ்டண்ட் கோரியோகிராஃபரான யானிக் பென்னின் இயக்கத்தில், ஆக்சன் காட்சிகளில் நடித்துக் கொண்டிருக்கிறார் நடிகை சமந்தா..!

்ரீதேவி மூவிஸ் சார்பில் சிவலெங்கா கிருஷ்ண பிரசாத் தயாரிக்கும் புதிய திரைப்படம் யசோதா’. இந்தப் படத்தில் சமந்தா முதன்மைக் கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்.

மேலும், வரல‌ஷ்மி சரத்குமார், உன்னி முகுந்தன், ராவ் ரமேஷ், முரளி ஷர்மா, சம்பத் ராஜ், சத்ரு, மதுரிமா, கல்பிகா கணேஷ், திவ்யா ஸ்ரீபாதா, பிரியங்கா ஷர்மா மற்றும் பலர் நடித்துள்ளனர்.

இசை – மணி சர்மா, வசனம் – புலகம் சின்னராயனா, Dr.சல்லா பாக்யலக்‌ஷ்மி, பாடல் வரிகள் – ராமஜோகையா சாஸ்திரி, கிரியேட்டிவ் டைரக்டர் – ஹேமம்பர் ஜாஸ்தி, ஒளிப்பதிவு – M.சுகுமார், கலை இயக்கம் – அசோக், சண்டை இயக்கம் – வெங்கட், படத் தொகுப்பு – மார்த்தாண்டன், K.வெங்கடேஷ், லைன் புரடியூசர் – வித்யா சிவலெங்கா, இணை தயாரிப்பு – சிந்தா கோபாலகிருஷ்ண ரெட்டி, இயக்கம் – ஹரி, ஹரிஷ், தயாரிப்பு – சிவலெங்கா கிருஷ்ண பிரசாத்.

தற்போது இந்தப் படத்திற்கு ஹாலிவுட் சண்டைப் பயிற்சி அமைப்பாளரான யானிக் பென்(Yannick Ben) சண்டை இயக்கம் செய்திருக்கிறார். இவர் ஹாலிவுட் படங்களான  ‘Transporter 3’, ‘Project 7’, ‘Paris By Night Of Living Dead’, ‘City Hunter’, Christopher Nolan படங்களான  ‘Inception’, ‘Dunkirk’, ஷாருக்கானின் ‘Raees’, சல்மான் கான் நடிப்பில்  ‘Tiger Zinda Hai’,   பவன் கல்யாண் நடிப்பில்  ‘Attarintiki Daredi’, மகேஷ் பாபு நடிப்பில்  1 – Nenokkadine முதலான படங்களுக்கு சண்டை இயக்கம் அமைத்துள்ளார்.

இவர் நடிகை சமந்தா உடன் முன்னதாக ‘Family Man-2 இணையத் தொடரில் பணியாற்றியுள்ளார். தற்போது இந்த யசோதா’ படத்திலும் இவர்கள் இருவரும் இணைந்து பணியாற்றுகிறார்கள்.

இது குறித்து தயாரிப்பாளர் சிவலெங்கா கிருஷ்ண பிரசாத் கூறுகையில், “யானிக் பென் இயக்கத்தில் சமந்தா உள்ளிட்டோர் நடித்த முக்கிய ஆக்‌ஷன் காட்சிகளை பத்து நாட்கள் படமாக்கியுள்ளோம். மூன்றுவிதமான செட்களில் படமாக்கிய அந்த சண்டைக் காட்சிகளில் சமந்தா அசாத்தியமான ஆக்‌ஷன் காட்சிகளை நடிக்க கடுமையாக உழைத்துள்ளார்.  

சமீபத்திய திரைப்படங்களில்  நாயகியை மையமாக வைத்து எடுக்கப்பட்ட படங்களைப்போல் அல்லாமல் இப்படத்தில் ஆக்‌ஷன் எபிசோடுகள் மிக அபாரமாக இருக்கும். படத்தின் கதை மட்டுமின்றி இந்த ஆக்சன் காட்சிகளும் படத்தின் முக்கிய ஹை லைட்டாக இருக்கும்.

தற்போதைக்கு ஹைதராபாத்தில் பிரமாண்டமான செட்டில் படப்பிடிப்பு தொடங்கி நடைபெற்று வருகிறது. 3 கோடி செலவில் கலை இயக்குனர் அசோக் அந்த செட்டை வடிவமைத்துள்ளார். வபும் மே 1-ம் தேதியுடன் முழு படப்பிடிப்பும் முடிவடையும் என எதிர்பார்க்கிறோம். ஒரு பரபரப்பான ஆக்‌ஷன் திரில்லராக  இப்படம் படமாக்கப்பட்டு வருகிறது…” என்றார்.

- Advertisement -

Read more

Local News