Saturday, September 21, 2024

ஷாரூக்கானின் மகனுக்கு ஜாமீன் கையெழுத்திட்ட நடிகை ஜூஹி சாவ்லா

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

பாலிவுட் சூப்பர் ஸ்டாரான நடிகர் ஷாரூக்கானின் மகன் ஆர்யன்கானுக்கு நடிகை ஜூஹி சாவ்லா ஜாமீன் பொறுப்பேற்றுள்ளார்.

சொகுசுக் கப்பலில் போதைப் பொருள் பயன்படுத்திய வழக்கில் கடந்த அக்டோபர் 2-ம் தேதி நடிகர் பாலிவுட் சூப்பர் ஸ்டார் ஷாருக்கானின் மகன் ஆர்யன்கான் கைது செய்யப்பட்டார்.

இதைத் தொடர்ந்து, தனக்கு ஜாமீன் கோரி ஆர்யன் கான் சிறப்பு என்டிபிஎஸ் நீதிமன்றத்தில் இரண்டு முறை வழக்கு தொடர்ந்தார். இந்த இரண்டு வழக்குகளும் நிராகரிக்கப்பட்டன.

இதனால் ஆர்யன் கான் மும்பை உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தார். இது குறித்து விசாரணை நடத்திய உயர் நீதிமன்றம், ஆர்யன் கானுக்கு கடுமையான நிபந்தனைகளுடன் ஜாமீன் வழங்கியது.

இந்த நிபந்தனையில் குடும்பத்தினர் அல்லாத வேறொருவர் 1 லட்சம் ரூபாய் ஜாமீன் அளிக்க வேண்டும் என்று உத்தரவிடப்பட்டிருந்தது. இதன்படி ஆர்யன்கானுக்கு 1 லட்சம் ரூபாய் ஜாமீனை நடிகை ஜூஹி சாவ்லா அளித்துள்ளார்.

இதற்காக அவர் நேற்றைக்கு மும்பை போதைப் பொருள் தடுப்பு சிறப்பு நீதிமன்றத்திற்கு நேரில் வந்து ஆர்யன்கானுக்கு 1 லட்சம் ரூபாய் ஜாமீன் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டார்.

ஆனாலும் சிறப்பு நீதிமன்றத்தில் ஜாமீன் தொடர்பான நடைமுறைகள் முடிவடைய நேற்றைக்கு இரவாகிவிட்டதால் நேற்று ஆர்யன்கானால் வெளியில் வர முடியவில்லை. நேற்று இரவு ஆர்யன்கானின் வழக்கறிஞர்கள் ஜாமீன் பத்திரங்களை கோர்ட்டில் இருந்து பெற்று நீதிமன்றத்தில் சமர்ப்பித்தார்கள்.

இதையடுத்து இன்று காலை ஆர்யன்கான் சிறையில் இருந்து விடுவிக்கப்படுவார் என்று எதிர்பார்க்கப்பட்டது. மகனை அழைத்துச் செய்ய நடிகர் ஷாரூக்கானே நேரில் வந்திருந்தார். ஷாருக்கானின் கார் ஆர்தர் ரோடு சிறைக்கு வெளியே நிறுத்தப்பட்டிருந்தது. இருப்பினும், ஷாரூக்கான் தனது வாகனத்தை விட்டு வெளியே வரவில்லை.

ஜாமீன் தொடர்பான சட்ட நடவடிக்கைகள் இன்று காலை முடிவடைந்தவுடன் மும்பை ஆர்தர் சாலை சிறையில் இருந்து ஆர்யன் கான் வெளியேறி தந்தை வந்த காரில் ஏறி வீட்டுக்குச் சென்றார்.

- Advertisement -

Read more

Local News