Thursday, April 11, 2024

நடிகர் மீதுதாக்குதல்:  பா.ஜ.க. பிரமுகர் கைது

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

சின்னத்திரையில் காமெடி நிகழ்ச்சிகளின் மூலம் பிரபலமாகி, திரையுலகிலும் ‘கருப்பசாமி குத்தகைதாரர்’, ‘வெடிகுண்டு முருகேசன்’, ‘சீடன்’ போன்ற படங்களில் நடித்தவர் வெங்கடேஷ் ஆறுமுகம். ரைஸ் அட்வர்டைசிங் என்ற விளம்பர நிறுவனத்தையும் நடத்தி வந்தார். இதனிடையே இவருக்கும், இவரது மனைவி பானுமதிக்கும் பிரச்சினை ஏற்பட்டதாக கூறப்படுகிறது.  இது தொடர்பான வழக்கு நீதிமன்றத்தில் நடந்து வருகிறது. இருப்பினும் ஒரே வீட்டில் இருவரும் வாழ்ந்து வருவதாகக் கூறப்பட்டது.

இந்த நிலையில், மர்ம நபர்களால் வெங்கடேஷ் கடுமையாக தாக்கப்பட்டார். காவல்துறை விசாரணையில், இறங்கியது.

இதைத் தொடர்ந்து  பானுமதி, ராஜ்குமார், மோகன், வைரமுத்து, ஆனந்தராஜ், மலைசாமி ஆகிய ஆறு பேர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். இந்த வழக்கில் தலைமறைவாக இருந்து வந்த டிரைவர் துளசி மற்றும் பா.ஜ.க. பிரமுகர் தமிழ்சங்கு ஆகிய 2 பேரையும் தற்போது போலீசார் கைது செய்துள்ளனர்.

- Advertisement -

Read more

Local News