Thursday, April 11, 2024

“கழுத்தைப் பிடிச்சு தள்ளினாங்க..” : நடிகர் தம்பி ராமையா

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

திரைத்துறைக்கு வந்த புதிதில், பட வாய்ப்புக்காக தேவர் ஃபிலிம்ஸ்  அலுவலகத்துக்குச் சென்றேன். அதன் அதிபர் தண்டாயுதபாணியை எப்படியாவது சந்தித்துவிட வேண்டும் என நினைத்தேன்.  காவலாளியிடம், ‘தண்டாயுதபாணி சார்தான் வரச் சொன்னார்’ என பொய் சொல்லிவிட்டு உள்ளே சென்றுவிட்டேன்.

அங்கு இருந்தவரிடமும்  அதையே சொன்னேன்.

அவர் மீண்டும், ‘தண்டாயுதபாணிதான் வரச் சொன்னாரா’ என்றார்.

நானும், ‘ஆமாம்..’ என்றேன்.

அவர் ஒரு முறை முறைத்தார். பிறகுதான் தெரிந்தது.. அவர்தான் தண்டாயுதபாணி என்று.

பிறகு ஏன் அங்கு நிற்கிறேன்.. ஓடியே வந்துவிட்டேன்” என்றார் தம்பி ராமையா.

- Advertisement -

Read more

Local News