Thursday, April 11, 2024

சிவாஜியின் பெருந்தன்மை!

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

சிவாஜி கணேசன், தாதா சாகிப் பால்கே விருது பெற்ற போது நடந்த ஒரு சம்பவத்தை நடிகர் பிரபு பகிர்ந்துகொண்டு இருக்கிறார்.

அவர், “அந்த நேரத்தில் செய்தியாளர்கள் பலரும் என் தந்தை சிவாஜி அவர்களை பேட்டி எடுக்க வந்துகொண்டே இருந்தனர். ஒரு கட்டத்தில் அவருக்க உடல் நிலை பாதிக்கப்பட்டது. இதை அறியாத ஒரு செய்தியாளர், நேராக வீட்டுக்கு வந்துவிட்டார். நான் அவரிடம் நிலைமையை எடுத்துச் சொல்லி, பிறகு ஒரு சந்தர்ப்பத்தில் அவரைப் பார்க்கலாம் என்றேன். இதை அறிந்த என் தந்தை,  என்னை கடிந்துகொண்டார்.

‘ஒரு கலைஞனுக்கு கவுரவம் கிடைத்திருக்கிறது. அதை தங்களுக்குக் கிடைத்ததாக கருதி செய்தியாளர்கள் பேட்டி எடுக்க வருகிறார்கள். அவர்களைத் தடுக்கக்கூடாது’  என்று கூறி, அந்த செய்தியாளரிடம் வருத்தம் தெரிவித்து, பேட்டியும் அளித்தார்” என்றார் பிரபு.

- Advertisement -

Read more

Local News