நடிகர் சந்தானத்தின் மைத்துனரான வினோத் துரைசாமி தயாரிப்பாளராக தமிழ்த் திரையுலகில் கால் பதிக்கிறார்.
NN pictures சார்பில் இவர் தயாரிக்கும் புதிய படத்தில் நடிகர் மைக்செட் ஶ்ரீராம் கதையின் நாயகனாக வெள்ளித் திரையில் அறிமுகமாகிறார். நடிகை மானசா மற்றும் ரிமி ஆகியோர் நாயகிகளாக நடிக்கின்றனர்.
படத்தில் நடிக்கும் மற்ற முக்கிய கதாப்பாத்திரங்களுக்காக தமிழ் திரையுலகின் முன்னணி நடிகர், நடிகைகளுடன் பேச்சு வார்த்தை நடந்து வருகிறது.
இயக்குநர் விவேக் எழுதி இயக்குகிறார். அருள்ராஜ் கென்னடி இசையமைக்க, முத்து மூவேந்தர் ஒளிப்பதிவு செய்யவுள்ளார். P.S.ராபர்ட் கலை இயக்கம் செய்கிறார்.
முழுக்க, முழுக்க இளைஞர்களின் வாழ்க்கையை பிரதிபலிக்கும்விதமாக, ரொமான்ஸ் காமெடி ஜானரில் அனைவரும் ரசிக்கும் வண்ணம் இப்படம் உருவாகவுள்ளது.

இந்தப் படத்தின் பூஜை நிகழ்வு நேற்று சென்னையில் பிரம்மாண்டமாக நடைபெற்றது. இந்த பூஜை நிகழ்வில் படக் குழுவினருடன், தமிழ்த் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கத் தலைவரான தேனாண்டாள் ஃபிலிம்ஸ் முரளி, PVR மீனா, Divo நிறுவனத்தின் தலைமை அதிகாரியான விசு ஆகியோருடன் 4 you கம்பெனி நிறுவனர் R.பிரகாஷ் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
இவ்விழாவினை தொடந்து, படக் குழுவினர் நடிகர் சந்தானத்தை நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றனர். படம் குறித்த செய்திகளை கேட்டறிந்த நடிகர் சந்தானம், படக் குழுவினருக்கு தனது வாழ்த்துக்களை தெரிவித்தார்.
படம் குறித்த மற்ற தகவல்கள் விரைவில் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படும்.