அரசியல்வாதி ஜெயலலிதா வெளிப்படையாக, தைரியமாக பேசுவார். செயல்பாடுகளும் அப்படித்தான். இது அனைவருக்கும் தெரியும்.
திரைத்துறையில் இருந்தபோதும் அவரது குணம் இப்படித்தான்.
பொதுவாக சக நடிகர்கள் குறித்து கருத்து கேட்டால், நடிகைகள் பதில் சொல்ல மாட்டார்கள்.. அல்லது மழுப்பி தப்பித்து விடுவார்கள். ஆனால் ஜெயலலிதா அப்படி அல்ல.
ஒருமுறை செய்தியாளர், “உங்களுடன் நடித்த ரவிச்சந்திரன் பற்றி உங்கள் கருத்து என்ன?” என்றார்.
அதற்கு ஜெயலலிதா பட்டென்று, “ரவிச்சந்திரனுக்கு பல ப்ளஸ் பாயிண்ட்டுகள் உண்டு. கதாநாயகனுக்கான தோற்றம், நடிப்பு, நடனம் எல்லாம் அவருக்கு உண்டு. அவர் என்னுடன் பல திரைப்படங்களில் நடிக்கும்போது இதை கவனித்து இருக்கிறேன்.
ஆனால் முதல் திரைப்படத்தில் நடிக்கும்போது அவருக்கு இருந்த ஆர்வம் பின்னாட்களில் காணாமல் போய்விட்டது. அவர் மட்டும் அதே ஆர்வத்தைத் தொடர்ந்திருந்தால், இன்னும் உச்சத்தை தொட்டிருப்பார்” என்றார்.
அப்படி ஒரு அதிரடி பெண்மணியாகவே விளங்கினார் ஜெயலலிதா.