Saturday, April 13, 2024

டி.ராஜேந்தர் அணியில் போட்டியிட நடிகர் பார்த்திபன் மறுப்பு

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

தமிழ்த் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கத்தின் தேர்தல் வேலைகள் மும்முரமாக நடைபெற்று வருகின்றன.

இந்தத் தேர்தலில் டி.ராஜேந்தர் தலைமையில் ஒரு அணி, தயாரிப்பாளர் முரளி ராமசாமி தலைமையில் ஒரு அணி, சிறிய பட தயாரிப்பாளர்கள் தனி அணி என்று 3 அணிகள் போட்டியிடவுள்ளதாகத் தெரிகிறது.

இதில் டி.ராஜேந்தர் அணியில் அவர் தலைவர் பதவிக்கும், மன்னன் செயலாளர் பதவிக்கும் போட்டியிடுகிறார்கள்.

இந்த அணியில் பொருளாளர் பதவிக்குப் போட்டியிட நடிகர் பார்த்திபனை அழைத்திருக்கிறார் டி.ராஜேந்தர். ஆனால் பார்த்திபனோ தனது அடுத்தப் பட வேலைகளில் மும்முரமாக இருப்பதால் இந்த முறை சங்கத்தில் எந்தப் பதவிக்கும் போட்டியிடப் போவதில்லை என்று சொல்லிவிட்டாராம்.

பார்த்திபன் விஷால் தலைமையில் அமைந்திருந்த சென்ற நிர்வாகக் குழுவில் துணைத் தலைவராக பதவி வகித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் தனது அணியில் போட்டியிடும் வேட்பாளர்களுக்கான மொத்த வேட்பு மனுக்களையும் இன்றைக்கு டி.ராஜேந்தர் வாங்கிச் சென்றுள்ளார்.

அவர் அணியின் மொத்த வேட்பாளர்களும் நாளை அல்லது நாளை மறுநாள் வேட்பு மனு தாக்கல் செய்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

- Advertisement -

Read more

Local News