Thursday, April 11, 2024

குண்டா இருந்த கேவலமா?: – குண்டு கல்யாணம் பேட்டி

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

நடிகர் குண்டு கல்யாணம் தனது ஆதங்கத்தை வெளிப்படுத்தி உள்ளார்.

அவர், “யாருடைய வாழ்க்கை என்றாலும் கேலி கிண்டல்கள் இல்லாமல் இருக்காது. எத்தனையோ பேர் கேலி செய்து இருக்கிறார்கள். குண்டா என்று சொல்வார்கள்..தடியா என்று சொல்வார்கள். எட்டு இட்லி இறா குழம்பு என்பார்கள். 10 இட்லி பருப்பு சாம்பார் என்று சொல்வார்கள்.

நான் படிக்கப் போகும் காலத்தில் இதை காரணம் காட்டி என்னை மிகவும் கஷ்டப்படுத்தினார்கள். வீட்டிலிருந்து பள்ளிக்கு என்னால் நடந்து கூட செல்ல முடியாது. பக்கத்தில் வந்து என்னை கிள்ளி விட்டு ஓடி விடுவார்கள். கல்லைத் தூக்கி எறிவார்கள்.

வகுப்பறையில் உட்கார்ந்து அழுது கொண்டிருப்பேன். என்னுடைய வாத்தியார் அதை பார்த்து என்னடா என்று கேட்பார். அவரிடம் கல்லை தூக்கி அடித்து விட்டார்கள் சார் என்று சொல்வேன். ஒன்றுமில்லை ஒன்றுமில்லை தைரியமாக இரு..என்று ஆறுதல் சொல்வார்.

யாரெல்லாம் என்னை கல்லை தூக்கி எறிந்தார்களோ அவர்கள் எல்லாம் பின்னால் நான் நடிக்க வந்த பிறகு என்னிடம் வந்து ஆட்டோகிராப் வாங்கினார்கள்” என்றார் குண்டு கல்யாணம்.

- Advertisement -

Read more

Local News