தமிழக அரசின் சார்பாக தமிழ்நாடு இயல், இசை, நாடக மன்றத்தின் மூலம் சிறந்த கலைஞர்களுக்கு அறிவிக்கப்பட்ட கலைமாமணி விருதுகள் வழங்கும் விழா இன்று சென்னை கலைவாணர் அரங்கில் நடைபெற்றது. 2021, 2022 மற்றும் 2023 ஆம் ஆண்டுகளுக்கான கலைமாமணி விருதுகளை மொத்தம் 90 கலைஞர்களுக்கு முதல்வர் மு.க. ஸ்டாலின் வழங்கினார்.அதன்படி, நடிகர் விக்ரம் பிரபு, எஸ்.ஜே.சூர்யா, நடிகை சாய் பல்லவி, இயக்குநர் லிங்குசாமி, இசையமைப்பாளர் அனிருத், பின்னணி பாடகி ஸ்வேதா மோகன் உள்ளிட்ட மொத்தம் 90 பேருக்கு கலைமாமணி விருது வழங்கப்பட்டது.மேலும், பாரதியார் விருது (இயல்) முனைவர் ந. முருகேச பாண்டியனுக்கு, எம்.எஸ். சுப்புலட்சுமி விருது (இசை) பத்மபூஷன் டாக்டர் கே.ஜே. யேசுதாஸுக்கு, பாலசரஸ்வதி விருது (நாட்டியம்) பத்மஸ்ரீ முத்துகண்ணம்மாளுக்கு வழங்கப்பட்டது.
