Touring Talkies
100% Cinema

Tuesday, June 3, 2025

Touring Talkies

நான் கதையையும் கதாபாத்திரத்தை மட்டுமே பார்ப்பேன் – நடிகை சிம்ரன் டாக்!

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

தென்னிந்திய திரையுலகில் முன்னணி நடிகையாக இருந்தவர் சிம்ரன். திருமணம், குழந்தைகள் போன்ற காரணங்களால் சில வருடங்கள் சினிமாவை விட்டு விலகியிருந்தாலும், அவ்வப்போது சில படங்களில் நடித்து வந்தார். தற்போது அவரது மகன் டீன் ஏஜ் பருவத்தில் இருக்கிறார். கடந்த சில ஆண்டுகளாக, முக்கியமான கதாப்பாத்திரங்களில் மீண்டும் நடித்து வருகிறார். குறிப்பாக சமீபத்தில் அபிஷன் ஜீவிந்த் இயக்கத்தில் சசிகுமாருடன் நடித்த ‘டூரிஸ்ட் பேமிலி’ திரைப்படம், நல்ல வரவேற்பைப் பெற்றதுடன் வசூலிலும் வெற்றிகரமாக அமைந்தது. இப்படம் 5 வாரங்களை கடந்தும் தியேட்டர்களில் தொடர்ந்து வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது. சசிகுமாரும், சிம்ரனும் உள்ளிட்ட அனைவரின் நடிப்பும் பாராட்டுகளை பெற்றுள்ளது.

இந்நிலையில் சிம்ரன் அளித்த ஒரு பேட்டியில், பொதுவாக எந்தக் கதாபாத்திரத்தில் நடித்தாலும் எனது நடிப்புக்கு பாராட்டு கிடைக்க வேண்டும் என விரும்புவேன். இந்த படத்தை நேரில் தியேட்டரில் பார்த்தபோது ரசிகர்கள் அளித்த ஆதரவை காண, மனம் நெகிழ்ந்துவிட்டேன். எப்போதும் என் நடிப்புக்கு ரசிகர்கள் ஆதரவு கிடைக்கவேண்டும் என்பதே என் ஆசை.

இந்த படம் வெற்றி பெற்றதற்கு முக்கிய காரணம் அதன் கதைதான். நான் எந்த படம் நடிக்கிறேனோ, அதில் பெரிய ஹீரோ இருக்கிறாரா, பெரிய நிறுவனம் தயாரிக்கிறதா என என்னால் பார்க்க முடியாது. கதையும், என் கதாபாத்திரமும் என்னைக் கவர வேண்டும். இயக்குனர் இந்தக் கதையை சொன்னபோது, இது வெற்றிபெறும் என எனக்கே தோன்றியது. எப்படி கதை சொல்லினார்ோ, அதே நயத்துடன் அதை திரைப்படமாக எடுத்துள்ளார். ரசிகர்கள் தியேட்டரில் சிரிப்பதும், அழுவது போல உணர்வுபூர்வமாக இருத்தல் போன்ற நிகழ்வுகள் எனக்கு காண முடிந்தது. இன்றைய சூழலில் நடக்கும் உண்மையான சம்பவங்களையே இந்தப் படம் பிரதிபலிக்கிறது என்று கூறினார்.

- Advertisement -

Read more

Local News