நடிகர் சூர்யா தற்போது ஆர்.ஜே.பாலாஜி இயக்கத்தில் அவரது 45வது படத்தில் பணியாற்றி வருகிறார். இதற்குப் பிறகு, வெற்றிமாறன் இயக்கத்தில் “வாடிவாசல்” என்ற படத்தில் நடிக்கவுள்ளார்.

இதன் பின்னர், வெங்கி அட்லூரி இயக்கத்தில் சூர்யா தனது 46வது படத்தில் நடிக்கவுள்ளார். இந்தப் படத்தை சித்தாரா என்டர்டெயின்மென்ட் நிறுவனம் தயாரிக்கின்றது, மேலும் இதற்கான இசையமைப்பினை ஜி.வி. பிரகாஷ் மேற்க் கொள்கிறார்.
இந்த படத்தின் படப்பிடிப்பு விரைவில் துவங்கவுள்ள நிலையில், தற்போது இந்த படத்தில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடிக்க தெலுங்கு நடிகர் விஜய் தேவரகொண்டா உடன் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.