நகைச்சுவை நடிகராக வலம் வந்த நடிகர் சூரி, ‘விடுதலை’ திரைப்படத்தின் மூலம் கதாநாயகனாக களமிறங்கினார். அதனைத் தொடர்ந்து ‘விடுதலை 2’, ‘கொட்டுக்காளி’, ‘கருடன்’ போன்ற படங்களில் ஹீரோவாக நடித்து வருகிறார். தற்போது ‘மாமன்’ என்ற திரைப்படத்தில் நடித்துள்ளார். இந்த படம் அடுத்த மாதம் திரைக்கு வரவுள்ளது. அதற்குப் பிறகு ‘மண்டாடி’ என்கிற புதிய படத்தில் அவர் கதாநாயகனாக நடிக்கிறார்.

இந்த புதிய திரைப்படத்தை ‘விடுதலை’ படத்தை தயாரித்த எல்ரெட் குமார் தயாரிக்க, ‘செல்பி’ திரைப்படத்தின் இயக்குநரான மதிமாறன் புகழேந்தி இயக்குகிறார். இசை அமைப்பாளராக ஜிவி பிரகாஷ் பணியாற்றுகிறார். இப்படம் கடலை மையமாக கொண்ட கதை என்றும், இது படத்தின் அறிவிப்பு போஸ்டரிலேயே வெளிப்படையாக தெரிகிறது. இந்தப் படத்தின் முதல் பார்வை போஸ்டர் நாளை (ஏப்ரல் 19) வெளியாக உள்ளது.
இந்தப் படத்தைப் பற்றிய தனது எக்ஸ் (முன்னாள் ட்விட்டர்) பதிவில் சூரி கூறியிருப்பதாவது, “எல்லையற்ற கடல் தன்னுள் முடிவில்லா ரகசியங்களை சுமக்கும்போது, நெருப்பினால் மட்டுமே அதன் கதைகளை சொல்ல முடிகிறது” என குறிப்பிட்டுள்ளார்.