தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குநர்களில் ஒருவர் பா.ரஞ்சித். தற்போது அவர் ‘வேட்டுவம்’ என்ற புதிய திரைப்படத்தை எழுதி இயக்கி வருகிறார். இதில், அட்டகத்தி தினேஷ் கதாநாயகனாக நடிக்க, ஆர்யா வில்லனாக நடிக்க இருக்கிறார்.

இந்நிலையில், இயக்குநர் பா.ரஞ்சித் தனது அடுத்த படமாக இந்திய கிரிக்கெட் வீரரின் வாழ்க்கை வரலாற்றை மையமாகக் கொண்டு உருவாக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி, இந்தியாவின் முதல் சிறுபான்மையினர் கிரிக்கெட் வீரர் என அறியப்படும் பல்வங்கர் பலூவின் வாழ்க்கையை மையமாகக் கொண்டு, ராமச்சந்திர குஹா எழுதிய ‘A Corner of a Foreign Field’ எனும் புத்தகத்தை அடிப்படையாக வைத்து திரைப்படமாக்க வேண்டும் என்ற அழைப்பு வந்ததாக அவர் ஒரு நிகழ்ச்சியில் தெரிவித்துள்ளார்.
மேலும், இந்தப் படம் தற்போது பேச்சுவார்த்தை நிலைக்கு வந்துள்ளதாகவும், விரைவில் மறைந்த கட்டங்களுக்குச் செல்லும் என நம்புவதாகவும் பா.ரஞ்சித் தெரிவித்துள்ளார்.