Sunday, September 29, 2024

வேட்டையன் படம் எல்லா எதிர்பார்ப்புகளையும் பூர்த்தி செய்யும் என்று நம்புகிறேன் – நடிகர் ரஜினிகாந்த் பேட்டி!

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

நடிகர் ரஜினிகாந்த் தனது 170வது படமான “வேட்டையன்” படத்தில் நடித்து முடித்துவிட்டார். இப்படம் வரும் மாதம் 10ம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது. இதில் அமிதாப் பச்சன், பகத் பாசில், மஞ்சு வாரியர் போன்ற பல முக்கியமான நட்சத்திரங்கள் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். ரஜினிகாந்த் இப்படத்துக்குப் பிறகு தனது 171வது படமாக “கூலி” படத்தில் நடித்து வருகிறார்.இந்த படத்தை “கைதி” மற்றும் “லியோ” படங்களை இயக்கிய லோகேஷ் கனகராஜ் இயக்குகிறார்.

தற்போது “கூலி” படத்தின் படப்பிடிப்பு விசாகப்பட்டினத்தில் நடைபெற்று வருகிறது. இந்நிலையில், ரஜினிகாந்த் விசாகப்பட்டினத்திலிருந்து சென்னை விமான நிலையம் வந்தபோது, “வேட்டையன்” படத்தைப் பற்றிய செய்தியாளர்களின் கேள்விகளுக்கு பதிலளித்தார். அவர் கூறுகையில்,

“வேட்டையன் படம் எல்லா எதிர்பார்ப்புகளையும் பூர்த்தி செய்யும் என்று நம்புகிறேன். வெளிநாடுகளிலும் வேட்டையன் படத்தின் முன்பதிவு நடைபெறுவதில் மகிழ்ச்சி அடைகிறேன். ‘தர்பார்’ படத்திற்கு பிறகு முழுமையாக போலீசாக நடிப்பது எனக்கு புதிய அனுபவமாக இருந்தது,” என்றார். மேலும், செய்தியாளர்கள் கேட்ட “திருப்பதி லட்டு சர்ச்சை” பற்றிய கேள்விக்கு பதிலளிக்க அவர் மறுத்து, “மன்னிக்கவும்” என்று கூறி சென்றார்.

- Advertisement -

Read more

Local News