Touring Talkies
100% Cinema

Tuesday, March 11, 2025

Touring Talkies

வேட்டையன் படத்தில் ரஜினிகாந்த் ஏன் என்கவுண்டர் ஸ்பெஷலிஸ்ட் தெரியுமா? – இயக்குனர் ஞானவேல் சொன்ன சீக்ரெட்!

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

டிஜே ஞானவேல் இயக்கத்தில் நடிகர் ரஜினிகாந்த், மஞ்சு வாரியர், அமிதாப் பச்சன் உள்ளிட்டோர் முக்கிய கதாப்பாத்திரங்களில் நடித்துள்ள “வேட்டையன்” படம் இன்னும் சில தினங்களில் திரையரங்குகளில் வெளிவரவுள்ளது. இந்த படத்திற்காக ரசிகர்கள் மிகவும் ஆவலுடன் காத்திருக்கின்றனர். படம் அக்டோபர் 10-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. இந்நிலையில் படக்குழு தொடர்ந்து படத்தின் பிரமோஷன்களில் ஈடுபட்டு வருகின்றனர். இதற்காக சில நாட்களுக்கு முன் சென்னையில் மிகவும் பிரம்மாண்டமாக இசை வெளியீட்டு விழா நடத்தப்பட்டது.

ஒரு பிரபல பத்திரிகைக்கு இயக்குனர் ஞானவேல் அளித்த பேட்டியில் படத்தின் சுவாரசியங்களை பகிர்ந்துள்ளார். அதில், “வேட்டையன்” படத்தில் நடிகர் ரஜினிகாந்த் எஸ்.பி. என்கவுண்டர் ஸ்பெஷலிஸ்ட்டாக நடிக்கிறார் என்று உறுதிப்படுத்தியுள்ளார். மேலும், அவர் எதற்காக என்கவுண்டர் ஸ்பெஷலிஸ்ட்டாக மாறினார், அதற்கான காரணங்கள் என்ன என்பதை படம் மூலம் தெரிந்துகொள்ளலாம் என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.

மேலும், ரஜினிகாந்த் மிகப்பெரிய நடிகர் என்றும், அவரது நடிப்புத் திறமை “முள்ளும் மலரும்” போன்ற படங்களில் சிறப்பாக வெளிப்பட்டது என்றும் ஞானவேல் கூறியுள்ளார். ஆனால், இதை ரஜினியிடம் சொன்னால், அவர் அதை ஏற்றுக் கொள்ள மாட்டார் என்றும் தெரிவித்துள்ளார். “வேட்டையன்” படத்தில் ரஜினியின் பல்வேறு நடிப்பு பரிணாமங்களை காணலாம் என்றும், ரஜினிக்காகவே நான் இந்தப் படத்தை உருவாக்கவில்லை, அவருக்கானது எனக்காகவே இந்தப் படத்தை உருவாக்கியதாகவும் கூறியுள்ளார். ரஜினியின் இமேஜை காப்பாற்றும் விதத்தில் இப்படத்தை தயாரித்துள்ளதாகவும் கூறியுள்ளார்.

- Advertisement -

Read more

Local News