தனுஷ் தனது மூன்றாவது படமாக ‘நிலவுக்கு என் மேல் என்னடி கோபம்’ என்ற படத்தை இயக்கிவருகிறார். இந்த படத்தில் கதாநாயகனாக அவர் தனது அக்கா மகன் பவிஷ் நடிக்கிறார்.
![](https://touringtalkies.co/wp-content/uploads/2024/08/1000061819-655x1024.jpg)
பவிஷ்க்கு இணையாக, அனைக்கா சுரேந்திரன், மேத்யூ தாமஸ், பிரியா பிரகாஷ் வாரியர், சரத்குமார் போன்ற பலரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். இந்த படத்துக்கு ஜி.வி.பிரகாஷ் இசையமைக்கிறார். வொன்டர்பார் பிலிம்ஸ் மற்றும் ஆர்.கே.புரொடக்சன்ஸ் என்ற இரண்டு நிறுவனங்கள் சேர்ந்து இந்த படத்தை தயாரிக்கின்றன.
இப்போது வரை இதன் 90 சதவீத படப்பிடிப்பு முடிந்து விட்டது. சமீபத்தில், ஜி.வி.பிரகாஷ் தனது எக்ஸ் சமூக வலைதள பக்கத்தில், ‘நிலவுக்கு என் மேல் என்னடி கோபம்’ படத்தின் முதல் பாடல் இறுதிகட்ட பணிகளில் உள்ளது. விரைவில் இப்பாடல் வெளியாகும், அதற்காக மிகுந்த ஆர்வத்துடன் காத்திருக்கிறேன் என பதிவிட்டுள்ளார்.