Touring Talkies
100% Cinema

Friday, May 16, 2025

Touring Talkies

விஜய் இயக்குநர்களிடம் கதை கேட்கும் ரசகிசயம்!

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

தமிழ் திரையுலகில் முன்னனி நடிகராக வலம் வரும் விஜய், கதை கேட்கும் முறை பற்றி அவருடைய அப்பாவும் இயக்குநருமான எஸ்.ஏ.சி. வெளிப்படையாக கூறினார்.

அவர்,  “ஒரு காலத்தில், விஜய்க்காக நான் தான் கதை கேட்பேன். கதையில் ஏதேனும் திருத்தம் இருந்தால் சொல்லி திருத்திக் கொண்டு அதன் பின் தான் விஜயிடம் போகும். நான் சொன்னாலே அது முடிவாகிவிடும்.

கொஞ்ச நாட்களுக்கு பிறகு இருவரும் சேர்ந்து கதை கேட்க ஆரம்பித்தோம். இப்பொழுது விஜய் தனியே கதை கேட்கிறார்.

 
அவர் கேட்கும் ஸ்டைலே தனி!  கதை கேட்கும் போது டேபிளுக்கு அடியில் தனது மடியில், ஒரு லெட்டர் பேட்  வைத்துக் கொள்வார். இயக்குநர் கதை சொல்லும் போது ஏதாவது சந்தேகம் இருந்தால் அதை அப்படியே பேடில் எழுதிக் கொள்வார். கடைசியாக அந்த சந்தேகங்களை கேட்டு தெரிந்து கொள்வார்” என்றார் எஸ்.ஏ.சி.

- Advertisement -

Read more

Local News