Friday, September 20, 2024

“தமிழ்த் திரையுலகம்தான் எனது தாய்வீடு!”: ஹன்சிகா பேட்டி

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

தமிழ், தெலுங்கு மொழி படங்களில் பிஸியாக நடித்து வந்த ஹன்சிகா,   தொழில் அதிபரான சோஹைல் கதூரியாவை  கடந்த டிசம்பர் மாதம் திருமணம் செய்துகொண்டார். பிறகு மும்பையில் செட்டில் ஆன அவர், படங்களில் நடிக்கவில்லை.

தற்போது திருமணத்துக்கு முன்பு ஒப்புக்கொண்ட படங்களில் நடிக்க முடிவு செய்து,  சென்னை வந்திருக்கிறார்.

இது குறித்து அவர், “நான் மீண்டும் நடிக்க வந்தது, தாய் வீட்டுக்கு மகள் வரும்போது எப்படி இருக்குமோ அதுபோல் உணர்கிறேன். இந்த வருடம் எனது நடிப்பில் ஏழு படங்கள் வெளியாக உள்ளன. சென்னையில் ஒரு மாதம் படப்பிடிப்புகளில் கலந்து கொள்ள இருக்கிறேன்.  திருமண வாழ்க்கை மிகவும் சிறப்பாக இருக்கிறது” என்றார் ஹன்சிகா.

- Advertisement -

Read more

Local News