Touring Talkies
100% Cinema

Thursday, March 13, 2025

Touring Talkies

கின்னஸ் சாதனை தமிழ் இயக்குநர் – நடிகர் மறைவு!

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

பிரபல திரைப்பட இயக்குநர் இ.ராமதாஸ் மாரடைப்பு காரணமாக மறைந்தார். இது  திரையுலகினர் மத்தியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

விழுப்புரத்தைச் சேர்ந்தவர் இ.ராமதாஸ்.  கல்லூரியில் படித்த காலத்திலேயே இயக்குநர்  கனவோடு சென்னை வந்தார்.  நடிகர் மனோபாலா மூலம் திரையுலக பிரபலங்களின்  அறிமுகம் ஏற்பட்டது.

 1980 ஆம் ஆண்டு வெளியான கரடி என்னும் படத்தில் பாடலாசிரியராக இ.ராமதாஸ் அறிமுகமானார். ஆனால் இந்த படம் வெளிவரவே இல்லை. பிறகு இயக்குநர் பி.எஸ்.நிவாஸின் “எனக்காக காத்திரு” படத்தில் திரைக்கதை எழுதினார். அதனைத் தொடர்ந்து சுமார் 6 படங்களில் இயக்குநரும், நடிகருமான மணிவண்ணன் படத்தில் உதவி இயக்குநராக பணிபுரிந்தார்.

1986 ஆம் ஆண்டு மோகன், சீதா நடித்த ‘ஆயிரம் பூக்கள் மலரட்டும்’ என்னும் படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமானார். இந்த படம் வசூல் ரீதியாக வெற்றி பெற்ற நிலையில் தொடர்ந்து ‘ராஜா ராஜா தான்’, ‘ராவணன்’,‘வாழ்க ஜனநாயகம்’ ஆகிய படங்களை இயக்கியிருந்தார்.


தமிழ்த் திரையுலகில்  24 மணி நேரத்தில் எடுக்கப்பட்ட கின்னஸ் சாதனை படைத்த  ‘சுயம் வரம்’ படத்தை இயக்கிய 9 இயக்குநர்களில் ஒருவராக ராமதாஸ் பணியாற்றினார்.  இதில் பாண்டியராஜன், கஸ்தூரி சம்பந்தப்பட்ட காட்சிகளை அவர் இயக்கினார்.

மேலும், திரைக்கதை ஆசிரியராக பொன் விலங்கு, ராஜாளி, அந்தப்புரம், கண்ணாத்தாள், எதிரும் புதிரும், சங்கமம், கண்ட நாள் முதல் உள்ளிட்ட பல படங்களில் பணியாற்றினார்.

2004 ஆம் ஆண்டு கமல்ஹாசன் நடிப்பில் வெளியான வசூல்ராஜா எம்பிபிஎஸ் படத்தின் மூலம் நடிகராக அறிமுகமான ராமதாஸ் தொடர்ந்து யுத்தம் செய், குக்கூ, காக்கி சட்டை, ஒரு ஊர்ல ரெண்டு ராஜா, விசாரணை, மெட்ரோ, தர்மதுரை, ஒருநாள் கூத்து, விக்ரம் வேதா, அறம், கோலிசோடா 2, மாரி 2 ஆகிய படங்களில் நடித்து தமிழ் திரை ரசிகர்களிடையே பிரபலமானார்.


இந்நிலையில் உடல் பிரச்சினை காரணமாக, சமீபத்தில் சென்னையில் தனியார் மருத்துவனையில் சேர்க்கப்பட்டார். சிகிச்சை பலனளிக்காமல் நேற்று இரவு மறைந்தார்.

இது குறித்து  இ.ராமதாஸ் மகன்  கலைச்செல்வன் ஃபேஸ்புக் பக்கத்தில் பதிவிட்டு உள்ளார். ராமதாஸ் மறைவு திரையுலகினர் மத்தியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. பலரும் அவரது மறைவுக்கு சமூக வலைத்தளம் மூலம் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

- Advertisement -

Read more

Local News