Touring Talkies
100% Cinema

Friday, May 16, 2025

Touring Talkies

நடிகர் சித்தார்த் மீது காவல் துறையில் புகார்!

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

நடிகர் சித்தார்த், தற்போது கமல்ஹாசனுடன் ‘இந்தியன்-2’ படத்தில் நடித்து வருகிறார். தெலுங்கு திரைப்படங்களிலும் நடித்து வருகிறார்.

சமூக – அரசியல்  கருத்துகளை தனது சமூக  வலைத்தள பக்கத்தில் தொடர்ந்து பகிர்ந்து வருகிறார்.

இந்த நிலையில் சித்தார்த் வெளியிட்டுள்ள பதிவில், “மதுரை விமான நிலையத்தில் மத்திய பாதுகாப்பு அதிகாரிகளால் 20 நிமிடங்கள் துன்புறுத்தலுக்கு உள்ளானேன். வயதான எனது பெற்றோர் கொண்டு வந்த பைகளில் இருந்த நாணயங்களை எடுக்கும்படி சொன்னார்கள். தொடர்ந்து இந்தியில் பேசிக்கொண்டு இருந்தனர். ஆங்கிலத்தில் பேசுங்கள் என்று சொல்லியும் மீண்டும் மீண்டும் இந்தியிலேயே பேசினார்கள். நாங்கள் எதிர்ப்பு தெரிவித்ததும் இந்தியாவில் இப்படித்தான் இருக்கும் என்று சொல்லி கடுமையாக நடந்து கொண்டனர். வேலையற்றவர்கள் அதிகாரத்தை காட்டுகிறார்கள்” என்று தெரிவித்து உள்ளார்.

சித்தார்த் பதிவு சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிது. இவருக்கு ஆதரவு தெரிவித்து மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடேசன் தனது இணையப் பக்கத்தில், “மதுரை விமானநிலையத்தில் சி.ஐ.எஸ்.எப் வீரர்கள் இந்தியில் பேசி கடுமையாக நடந்து கொண்டதாக திரைக்கலைஞர் சித்தார்த் எழுப்பியுள்ள குற்றச்சாட்டு குறித்து உரிய விசாரனை மேற்கொள்ள வேண்டும் என மதுரை விமான நிலைய அதிகாரிகளிடம் கோரியுள்ளேன்” என்று பதிவிட்டு இருந்தார்.

இந்நிலையில், நடிகர் சித்தார்த் மீது இந்து மக்கள் கட்சியின் சார்பில், மதுரை  காவல் ஆணையரிடம் புகாரளித்துள்ளார். அந்த புகாரில், மொழி பிரச்சனையை தூண்டும் வகையில் சித்தார்த்தின் சமூக வளைதளப் பதிவு இருப்பதாக கூறப்பட்டு  உள்ளது.
 

- Advertisement -

Read more

Local News