பஞ்சு அருணாச்சலத்திற்கு மிக நெருக்கமாக இருந்த நடிகர் ரஜினிகாந்த். ஒரு நாள் இயக்குனர் எஸ்.பி.முத்துராமனை அழைத்த ரஜினி பஞ்சு அருணாச்சலத்திற்கு ஒரு படம் பண்ணலாம் என நினைக்கிறேன். ஆனால் எனக்கு முழு நேரத்தையும் ஒதுக்க முடியாது அதற்கு பதில் 15 நாட்கள் கால்ஷீட் அவருக்கு தருகிறேன்.
நீங்கள் எடுக்கும் படத்தில் என்னை கௌரவ தோற்றத்திற்கு பயன்படுத்தி கொள்ளுங்கள் என கேட்டுள்ளார். அதற்கு பதிலளித்த எஸ்.பி.முத்துராமன்
இப்படி தேன்றுவதால் எந்த பயனும் இல்லை, ஆனால் ஒன்று செய்யலாம் நீங்கள் 15 நாட்களுக்கு பதில் இன்னும் கூடுதலாக 10 நாட்கள் கொடுங்கள் அதற்குள் நான் ஒரு திரைப்படத்தை எடுத்து விடுவேன்” என கூறியிருக்கிறார்.
ஆச்சரியப்பட்ட ரஜினி “25 நாட்கள் கால்ஷீட் கொடுத்தார்.
அதன் பிறகு எஸ்.பி. முத்துராமன் இயக்கத்தில் அருணாச்சலம் திரைக்கதை எழுதி தயாரித்து ரஜினி,பிரபு, சீதா, கௌதமி ஆகியோர் நடித்து வெளியான திரைப்படம் தான் “குரு சிஷ்யன். அவர் கொடுத்த 25 நாட்கள் கால்ஷீட் 23 நாட்களில் படமாக்கப்பட்டு திரையில் குரு சிஷ்யன் திரைப்படம் வெளியில் வந்தது.