Touring Talkies
100% Cinema

Thursday, March 13, 2025

Touring Talkies

“தாய்க் கிழவி என்று அழைக்க வேண்டாம்” – ரசிகர்களிடம் நித்யா மேனன் வேண்டுகோள்

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

“தன்னை ’தாய்க் கிழவி’ என்று அழைக்க வேண்டாம்” என நடிகை நித்யா மேனன் சினிமா ரசிகர்களிடத்தில் கேட்டுக் கொண்டுள்ளார்.

தனுஷ், நித்யா மேனன் நடிப்பில் கடந்த 18-ம் தேதி வெளியான படம், ’திருச்சிற்றம்பலம்’. மித்ரன் ஜவஹர் இயக்கிய இந்தப் படத்தை சன் பிக்சர்ஸ் தயாரித்துள்ளது. இதில் ராஷி கண்ணா, பிரியா பவானி சங்கர், பிரகாஷ்ராஜ், பாரதிராஜா உட்பட பலர் நடித்துள்ளனர். ஓம் பிரகாஷ் ஒளிப்பதிவு செய்துள்ள இந்தப் படத்துக்கு அனிருத் இசை அமைத்துள்ளார்.

இந்தப் படத்தில் ஷோபனா’ என்ற கேரக்டரில் வரும் நித்யா மேனனின் நடிப்பு அனைவராலும் பாராட்டப்பட்டு வருகிறது. இந்தப் படத்தில் ’தாய்க் கிழவி’ என்ற பாடலும் உள்ளது.

இந்தப் பாடல் பெரும் வெற்றி பெற்றதையடுத்து தற்போது சமூக வலைதளங்களில் நடிகை நித்யா மேனனை தாய்க் கிழவி’ என்றே ரசிகர்கள் அழைத்து வருகின்றனர். ஆனால் தன்னை தாய்க் கிழவி என்று பலரும் அழைப்பது தனக்குப் பிடிக்கவில்லை என்று நித்யா மேனன் தெரிவித்துள்ளார்.

தனது இன்ஸ்ட்டாகிராம் பக்கத்தில் நேரலையில் தோன்றிய நித்யா மேனன், “ரசிகர்கள் யாரும் என்னை அந்தப் பெயரில் அழைக்க வேண்டாம். அதில் எனக்கு ஆர்வம் இல்லை” என்று வேண்டுகோள் விடுத்துள்ளார்.

- Advertisement -

Read more

Local News